கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்து இருந்த பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தார். உடனே காவல் துறையினர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மான் கொம்புகள் இருந்தன. உடனே அந்த பையை கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமி சரண் என்பவரை காவல் துறையில் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆவணங்கள் இன்றி மான் கோம்புகள் வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது ? விற்பனை செய்ய கொண்டு வந்தாரா ? என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….
Follow Us
Recent Posts
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
-
தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு
-
ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
கிணத்துக்கடவில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது: 260 மது பாட்டில்கள் பறிமுதல்
Leave a Reply