Thursday, July 17

தமிழ்நாடு

ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளை திறப்பு…

ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளை திறப்பு…

கோவை
நகை கடை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் இன்று திறந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வைரம்  நகைகள் கண்கவர் டிசைகளில் உள்ளன.  திறப்பு சலுகையாக பழைய தங்க நகைகளை 50 சதவிகித தள்ளுபடி யில் புதிய தங்க நகைகளாக மாற்றிக் கொள்ளலாம், வைர நகைகளுக்கு ஒரு காரடிற்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, 0% V.A வில் தங்க நகை நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த  ஜுவல் ஒன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தமிழகத்தில் இது 14 வது கிளை என தெரிவித்தார். இங்கு பல்வேறு டிசைன்களில் நகைகள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எந்த டிசைன்களில் நகைகள் வேண்டும் என்று கேட்கிறார்களோ அது வடிவமைத்து தரப்படும் என தெரிவித்தார்.இதில் உடன் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனரான திரு. சீன...
கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…

கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…

கோவை
கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரவையின் கௌரவ ஆலோசகர்கள் சாந்தப்பன், அஜித்குமார், தலைவர் செந்தாமரை, நிறுவனர் கேரள விஸ்வநாதன், சேர்மன் டாக்டர் ரவீந்திரன், பொதுச் செயலாளர் சுதீஸ், பொருளாளர் பைங்கிளி சாஜில், இளைஞர் அணி செயலாளர்கள் அபிலாஷ், ராஜேஷ், சுசி, மகளிர் அணி பிரதிநிதிகள் சரிதா, விஜயலட்சுமி பிரிதீப் ஆகியோர்களுடன், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில:நாராயண குரு ஜெயந்திக்கு தமிழக அரசு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில் நாராயண ...
கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்

கோவை
சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு,  அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னால் நீதிபதி   ராஜ் அவர்களை  தேர்தல் அதிகாரியாக நியமித்து, நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது..இதில், 2025-28ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.இதில்  மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில், உதவி தலைவர்களாக ராஜா, பிரேம்நாத், ராஜேந்திரன், ஸ்ரீஹரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் செயலாளராக அனில் குமார்,  உதவி செயலாளராக சிவசுப்ரமணியன், பொருளாளராக சண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக சுந்தரராஜ், செல்வக்குமார், பிளசிங் செல்வக்குமார், சவுந்தரராஜன், அஜேஷ், வினோத், ராபின்சன் ஆகியோர் போட்டியி...
கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு !!!

கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு !!!

கோவை
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி மற்றும் புனித சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்க...
கோவையில் வாசன் கண் மருத்துவமனை புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெற்றது….

கோவையில் வாசன் கண் மருத்துவமனை புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெற்றது….

கோவை
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதி  வாஸன் கண் மருத்துவமனையானது எய்ம்ஸ் தரத்தில் தரம் உயர்த்தப்பட்டு உலகத் தரமான மருத்துவர்கள் மற்றும் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய மருத்துவ சேவையை புதுப்பொழிவுடன் துவக்க விழா வாஸன் கண் மருத்துவமனை மருத்துவ  இயக்குனரும் கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எய்ம்ஸில் தங்கப் பதக்கம் பெற்ற அனுஷா வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.... துவக்க விழாவில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஜெயமணிகண்டன், குழந்தைகள் நல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜகா ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்... இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி மருத்துவ மனையின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம், பெங்களூர் ஐ.எஸ். ஆர்.ஓ திட்ட இயக்குநர் தேன்மொழி செல்வி, விமான படைத்தளபதி விகாஸ் வாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வாஸன் கண் மரு...
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா…

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா…

கோவை
கோவையில் கடந்த 1992 ஆம் ஆண்டு கோட்டை தர்மரேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா கடைசியாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளாக இந்த சித்திரை  தேர்திருவிழா நடக்கவில்லை. இந்த சித்திரை திருவிழாவை எப்படியாவது நடத்துவதற்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோவையில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் திருவிழா நடப்பதற்கு மனு ஒன்றை அளித்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இந்த திருவிழாவை நடப்பதற்கு அனுமதி கொடுத்தது இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி பாதுகாப்போடு இந்த வருடம் சித்திரை தேரோட்டம் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. மேலும் தொடர்ந்து   பக்தர்களுக்கு ஹிந்து பாதுகாப்பு இயக்கம் சார்பாக அன்னதானம் , குளிர்பானம்,குடிநீர் மற்றும் மோர் வழங்கினர்கள் . இந்த திருவிழாவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக...
கோவையில் தங்க நகை மோசடி: எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் லாவண்யா புகார்

கோவையில் தங்க நகை மோசடி: எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் லாவண்யா புகார்

கோவை
எஸ்.வி.கே மூவீஸ் நிறுவன பங்குதாரர் திருமதி லாவண்யா இடமிருந்து நகைகள் மற்றும் சொத்துகளை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் நந்தகுமார் கூறியதாவது:"எனது கட்சிக்காரரான லாவண்யா அவர்கள் எஸ்.வி.கே மூவீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய ரமேஷ் என்பவர், தலா 100 கிராம் எடையுள்ள பத்து தங்க கட்டிகளை விற்பனை செய்து தருவதாக கூறி பெற்றுச் சென்றார். பின்னர் அவை திருப்பி வழங்கப்படவில்லை.மேலும், அவரது மனைவி மைதிலி, முனீஸ்வரன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், நாராயணன் ஆகியோர் இணைந்து திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முனீஸ்வரன், இரு தங்க கட்டிகளை பெற்றுக் கொண்டு அவற்றை திருப்பிக்கொடுக்க மறுத்துள்ளார்.இவர்கள் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லாவண்யாவிற்குச் சொந்தம...
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்: கட்டாய கல்வி சட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்…

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்: கட்டாய கல்வி சட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்…

தமிழ்நாடு
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தலைவர் ஈசுவரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், மாநிலம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை சாளர (Single Window System) முறை கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. CBSE மற்றும் ICSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் ஒரே இணையதள பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும், பள்ளிகளில் கல்விக்கட்டண சீர்மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்க தலைவர் ஈசுவரன், “2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கட்டாய கல்வி சட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. அந்தச் சட்டத்தின் மூலம் அமைச்சர்களின் குழந்தைகள் பட...
தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் 42வது நலத்திட்ட விழா..

தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் 42வது நலத்திட்ட விழா..

தமிழ்நாடு
தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் 42வது வியாபாரிகள் நலத்திட்ட விழா கோவை கொடிசியா வளாகத்தில்盛ழமைவாக நடைபெற்றது. இந்த விழா சம்மேளனத்தின் நிறுவனர் சேவாரத்னா டாக்டர் M.R. முருகன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்றது. அவரின் நினைவிடத்தில் கோவை மாவட்டத் தலைவர் அண்ணாச்சி S.M.(எ)P. முருகன் தலைமையில் வடவள்ளி கிளை மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகளும் மலரஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய அம்சமாக, கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த 10,000க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் குழுவாக டோக்கன்கள் வழங்கப்பட்டு, பரிசுகளாக வாஷிங் மெஷின், டிவி, குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. பெண்கள் அனைவருக்கும் புடவைகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் போது, கோவையில் இருந்து நெல்லைக்கு வர்த்தகிகள் பயண...
வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் கார் டிரைவர் கொலை: மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பு

வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் கார் டிரைவர் கொலை: மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பு

தமிழ்நாடு
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.கீரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர், கல்லூரியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்திலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று அதிகாலை மர்மநபர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து, மணிகண்டனை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்நிலையில், கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களின் ...