Wednesday, February 12

புதுச்சேரி

புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்<br><br>

புதுகுப்பம் அரசு பள்ளி மதில் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் காயம்

புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தின் மணவெளி தொகுதியில் உள்ள புதுகுப்பம் மீனவ கிராமத்தில் அமைந்த அரசு ஆரம்பப்பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை அறிந்த பாமக மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பேசி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.அப்போது, அவர் தெரிவித்ததாவது:"புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கட்டிடங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் கட்டிடத்தின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பழுதாகிய கட்டிடங்கள் மற்றும் மதில் சுவர்களைப் பற்றிய தகவலை உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அவற்றை...
அதிமுக செயலாளர் அன்பழகன்,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

அதிமுக செயலாளர் அன்பழகன்,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

புதுச்சேரி
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இந்தியாவிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்கள் மாநில இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடந்த 29-01-2025 அன்று உச்சநீதிமன்றம், சிவில் அப்பீல் எண்.9289/2019 மற்றும் WRIT PETITION (C) NO.1183/2020 வழக்குகளின் தீர்ப்பில், மாநில ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் அமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக, மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அகில இந்திய அளவில்...
இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

இணைய மோசடியில் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்…

புதுச்சேரி
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா வேலை வாய்ப்புக்காக இணைய வழி மோசடியில் சிக்கி 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழந்தார். அந்த சம்பந்தமான புகாரின் பேரில், இணைய வழி போலீசார் விசாரித்து பெங்களூர் மற்றும் பிஹாரைச் சேர்ந்த நான்கு நபர்களை கைது செய்து, 65 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட நபர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி மோசடி செய்ததாக கண்டுபிடித்தனர்.அந்த வழியில், ராஜேஷ் குமாருக்கு இழந்த 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதனால், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துப் புதுச்சேரியில் நேற்று அவர் இணைய வழி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்....
பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா<br><br>

பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா

புதுச்சேரி
புதுவை மாநிலம், பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளுக்கான மூன்று மாத சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று பலனடைந்தனர்.இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை தாங்கியுள்ள புதுவை மாநில தற்காப்பு கலை சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பெருமிதம் செய்தார்.கௌரவ விருந்தினர்களாக கார்த்திகேயன் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ அரிவாம் பலம் பட்டதாரி ஆசிரியை, ஆண்டனி ராக் சத்யா உடற்கல்வி ஆசிரியர், அரியூர் செல்வம்...
புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா<br>

புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா

புதுச்சேரி
தவளக்குப்பம் இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் ஆணைக்கிடை கீழ், தேசிய உயர்கல்வி திட்ட நிதியில் (RUSA) ₹66.99 லட்சம் மதிப்பில் 314.29 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி மணவெளித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு. செல்வம் ஆர் மற்றும் புதுச்சேரி அரசு உள்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.விழாவில் புதுச்சேரி அரசு உயர்கல்வி துறை இயக்குநர் திரு. அமன் ஷர்மா மற்றும் தேசிய உயர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. K. அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹென்னா மோனிஷா, கல்வி...
பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது

பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது

புதுச்சேரி
புதுச்சேரி: இளம் பெண் மாடலிங் செய்துகொண்டிருந்தார், அவருடைய புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, அவரது சக நண்பர்களுக்கும் அப்படியாக புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய நபர் கைது.புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் கல்லூரியில் பட்ட படிப்புடன் பியூடிசியன் மாடலிங் செய்துவந்த பெண், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் பல ஆயிரம் பேரால் பின்தொடரப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு, ஒருவர் அந்த புகைப்படங்களை திருடி, கேவலமாக மார்பிங் செய்து ஆபாச வார்த்தைகள் மூலம் மிரட்டியதாக தெரியவந்தது. அவருக்கு மேலும், ஆபாச வீடியோ காலில் தொடர்பு கொள்ள அல்லது புகைப்படங்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக அவர் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில், இணையவழி காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. அந்த நபரின் செல்போன் கண்காணிக்கப்பட்டு, அவனின் இன்ஸ்டாகிராம் மற்று...
அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க ஆர்ப்பாட்டம்<br><br>

அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி
புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் மீனவ பெண்கள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்தந்த பகுதிகளில், மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் தாக்குதல் தொடர்ந்தும் மீண்டும் உயர்ந்த ஆபத்தான நிலையை உருவாக்குவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.இலங்கை கடற்படையினர் கடந்த நாள் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை துப்பாக்கிச்சூடு ...
“நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் திருமுருகனிடம் மசோதா”<br><br>

“நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் திருமுருகனிடம் மசோதா”

புதுச்சேரி
பாரதிய நியாய விலை கடை ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், மாண்புமிகு குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. திருமுருகன் அவர்களை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நியாய விலை கடை ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, 2025 மார்ச் மாத பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கட்டமாக 56 மாத நிலுவை ஊதியத்தில் 7 மாத நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.அத்தோடு, ரூபாய் 4000 தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம...
இலவச மருத்துவ முகாம்: 500 பேர் பயன்!

இலவச மருத்துவ முகாம்: 500 பேர் பயன்!

புதுச்சேரி
புதுச்சேரி மாநில அதிமுக மருத்துவ அணி, மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து புதுச்சேரி மாநில அதிமுக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் இன்று உப்பளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நேதாஜி நகர், ஒலாந்தரியா சமுதாய நலக் கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை திறந்து வைத்தார்.இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, பல், தொண்டை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் இந்த முகாமிலிருந்து பயனடைந்தனர். சிகிச்சை பெற்ற அனைவருக்கும் ஊக்குவிக்கும் வகையில் சர்க்கரை வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற ...
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

புதுச்சேரி
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு செயலர் டாக்டர் முத்தம்மா மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் டாக்டர் சிவகுமார் விழிப்புணர்வு நடைப்பயணத்தை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் குமரன், செயற்பொறியாளர் சீதாராம ராஜ் அங்காளன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.சுமார் 500 கல்லூரி மாணவிகள் பல்வேறு வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு எஸ்.வி. பட்டேல் சாலை,...