
பிரமாண்டமாக திறக்கப்பட்ட சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர்…
1929ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிட்ரோன், ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான பிரபலமான ஃபிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனம். கார் தயாரிப்பில் தனித்துவமான முறையில் முன்னேறியுள்ள இந்த நிறுவனம், உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.அதேபோல், ஆட்டோமொபைல் விற்பனை மற்றும் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜெயராஜ் குழுமமும் தனது 100 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டணியாக இணைந்து, இந்தியாவில் சிட்ரோன் கார் விற்பனையில் முன்னேற்றம் செய்ய முனைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூரில், ஜெயராஜ் குழுமத்தின் சார்பில் புதிய மற்றும் நவீனமான சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் மிகுந்த பிரமாண்டத்துடன் திறக்கப்பட்டது.இந்த நிகழ்வில், சிட்ரோன் பிராண்ட்...