Friday, June 13

இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் 21 நீதிபதிகள் சொத்து விவரம் இணையத்தில் வெளியீடு

உச்ச நீதிமன்றத்தின் 21 நீதிபதிகள் சொத்து விவரம் இணையத்தில் வெளியீடு

இந்தியா
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பணியாற்றி வரும் 33 நீதிபதிகளில் பெரும்பாலானோர் சொத்துவிவரங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், மற்ற நீதிபதிகளின் விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்ற 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதுடன், பெண் நீதிபதிகளில் பீலா எம். திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார். பி.வி. நாகரத்னா இன்னும் விவரம் சமர்ப்பிக்கவில்லை.தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த விவரங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு பகிரும் முக்கியமான கட்டமாகக்...
வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்தி பரப்புகிறது – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்தி பரப்புகிறது – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…

இந்தியா
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளை பரப்பி வருகிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது" என்று கூறினார்.அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, நாட்டின் முற்போக்கான பயணத்தில் ஒரு முக்கியமான அடையாளமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் உள்ளது என காங்கிரஸ் பரப்பும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லையென்றும், இதுவே இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் ...
திருப்பதிக்கு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச மின்சார பஸ் சேவை…

திருப்பதிக்கு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச மின்சார பஸ் சேவை…

இந்தியா
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் வழியாக மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து நடைபாதை இடங்களுக்கு ஆட்டோ, கார், வேன் போன்றவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக 20 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன.இந்த மின்சார பஸ்கள் நன்கொடையாளர்களின் உதவியுடன் பெறப்பட்டுள்ளன. புதிய திட்டத்தின் கீழ், பஸ் மற்றும் ரெயில் நிலையங்களிலிருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை பகுதிகளுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த செய்தி நடைபாதை வழியாக சாமி தரிசனம் செல்லும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நேற்று (05 மே) திருப்பதியில் 83,380 பேர் சாமி தரிசனம் செய்தன...
பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! கலர் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! கலர் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

இந்தியா
டெல்லி: வாகனங்களில் எரிபொருளின் வகையை வெளிப்படுத்தும் வண்ண ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தகட்டுகளின் (HSRP) ஒரு பகுதியாக இந்த வண்ண ஸ்டிக்கர்கள் இடம்பெறுகின்றன. 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் இவை கட்டாயமாக்கப்பட்டன. ஸ்டிக்கர் இல்லையெனில்: மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 192(1)ன் கீழ் ரூ.5,000 அபராதம் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC) வழங்கப்படாது போக்குவரத்து துறையினர் நேரடி கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்துவார்கள் எந்த எரிபொருளுக்கு என்ன நிறம்? புதிய மற்றும் பழைய வாகனங்கள் இரண்டும் இத்துடன் பின்பற்ற வேண்டியது கட்டாயம். மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக...
76வது குடியரசு தின விழா!

76வது குடியரசு தின விழா!

இந்தியா
76வது குடியரசு தின விழா முன்னிட்டு, சார்-ஆட்சியர் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார்.இதனை தொடர்ந்து, நேதாஜி ரோடு அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.விழாவில் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ...
“ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்படதை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்”

“ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்படதை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்”

இந்தியா
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காவல் நிலையத்தில் இந்திய இறையன்மைக்கு எதிராக பேசியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கண்டித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அசாம் மாநில பாஜக அரசை கண்டிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான காங்கிரஸ் கட்சியினர் கலந்து, ராகுல் காந்தி மீது உள்ள வழக்கை திரும்ப பெறக் கோரி, பாஜக அரசையும் கண்டித்து பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ...
சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள்: மத்திய தொலைத் தொடர்பு துறையின் எச்சரிக்கை

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள்: மத்திய தொலைத் தொடர்பு துறையின் எச்சரிக்கை

இந்தியா
+91 இலிருந்து தொடங்காத +8, +85, +65 போன்ற சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை வலியுறுத்தியுள்ளது.சர்வதேச எண்களில் இருந்து மோசடியாளர்கள் அரசு அதிகாரிகளைப் போல பேசி, பணமோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில், அக்டோபர் 22 அன்று புதிய அமைப்பை தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி சர்வதேச அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.தற்போது, அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காமலும், இவற்றை 'சஞ்சார் சாத்தி' இணையதளத்தில் புகார் அளிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும், மோசடி அழைப்புகள் குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள்...
காட்டு யானை தடங்கலிலும் ஜீப்பிலேயே பிரசவம்: தாயும் சேயும் நலமாக மீட்பு

காட்டு யானை தடங்கலிலும் ஜீப்பிலேயே பிரசவம்: தாயும் சேயும் நலமாக மீட்பு

இந்தியா
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே உள்ள நெல்லியம்பதி பகுதியைச் சேர்ந்த சுஜய் சர்தாரின் மனைவி சாம்பா, இரவில் ஏற்பட்ட பிரசவ வலியால் ஜீப்பிலேயே ஆண் குழந்தையை பிரசவித்தார்.சாம்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கணவர் சுஜய் அவரை ஜீப்பில் நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். காட்டு வழியாக பயணித்த போது, பிரசவ வலி அதிகரித்ததால் ஜீப்பிலேயே குழந்தை பிறந்தது.அதன்பின், சுகாதார பணியாளர்கள் சுதினா மற்றும் ஜானகி மருத்துவரின் ஆலோசனைப்படி ஜீப்பிலேயே தொப்புள் கொடியை அறுத்து முதல்கட்ட சிகிச்சைகள் அளித்தனர்.சாம்பாவையும் குழந்தையையும் அருகிலுள்ள நென்மாரா சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில், அவர்கள் பயணித்த ஜீப்பை காட்டு யானை ஒன்று வழிமறித்தது. யானையை கண்ட அனைவரும் பீதியில் உறைந்தனர்.வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுக்குள்...
நூல் அஞ்சல் சேவையை நிறுத்தியது: புத்தக ஆர்வலர்கள் அதிர்ச்சி

நூல் அஞ்சல் சேவையை நிறுத்தியது: புத்தக ஆர்வலர்கள் அதிர்ச்சி

இந்தியா
இந்திய அஞ்சல் துறை, டிசம்பர் 18 முதல் நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் புத்தக ஆர்வலர்கள், பதிப்பகங்கள், மற்றும் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க விரும்பும் சமூகங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.அஞ்சல் துறையின் நூல் அஞ்சல் சேவை, ஐந்து கிலோ புத்தகங்களை வெறும் ₹80 விலைக்கே அனுப்பும் வசதி வழங்கியது. இதனால் கல்வி மற்றும் வாசிப்பு பரவலுக்கு முக்கிய பங்கு ஆற்றியது. இச்சேவை தற்போது விவாதமின்றி நிறுத்தப்பட்டுள்ளது.விலை உயர்வு:நூல் அஞ்சலின் விலை ₹32-₹80 என இருக்க,தற்போது ₹78-₹229 வரை உயர்ந்துள்ளது.இரண்டு கிலோ பார்சலுக்கு ₹45-₹116,ஐந்து கிலோ பார்சலுக்கு ₹80-₹229 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வரும் மாதிரி புத்தகங்களுக்கும் (Sample Copies) தற்போது 5% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக வர்த்தகத்தில் அதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளன.பதிப்பகங்கள் ...
டெல்லியில் அபூர்வ வகை வவ்வால் இனத்தின் கண்டுபிடிப்பு

டெல்லியில் அபூர்வ வகை வவ்வால் இனத்தின் கண்டுபிடிப்பு

இந்தியா
டெல்லியில் உள்ள யமுனா ஆற்றின் கரையில் அபூர்வமான வவ்வால் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த வவ்வால் பிலோஸ்டோமிடே குடும்பத்தைச் சேர்ந்ததாகும், இது இந்தியாவில் மிகக் குறைவாகவே காணப்படும் இனமாகும். இந்திய வனவிலங்கு ஆய்வகத்தின் (WII) ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். வவ்வால் யமுனா கரையின் மழைக்காடுகளில் உள்ள மைக்ரோகோபியில் தங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த வவ்வால் வன சூழலில் பல்லுயிர் வளத்தையும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதன் இருப்பு தில்லி சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைவடைவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வவ்வால்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் கிருமி பரவலை கட்டுப்படுத்தவும், இயற்கை மரபுகளை நிலைநிறுத்தவும் உதவ...