Saturday, July 5

அரசியல்

ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்கியது – வெளியுறவுத்துறை விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்கியது – வெளியுறவுத்துறை விளக்கம்

அரசியல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றி மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.இந்த நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளின் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.விக்ரம் மிஸ்ரி உடன் செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங்க் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரும் பங்கேற்றனர். இச்சந்திப்பில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய மக்களின் நிலை குறித்த காணொளியும் வெளியிடப்பட்டது.விக்ரம் மிஸ்ரி,“பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித...
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் – கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் – கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்

அரசியல்
பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாதிகள் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சுந்தராபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.பாஜக நிர்வாகி வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"மோடி அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் அபிவிருத்தி பாதையில் பயணிக்கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற பொய்ப் பிரச்சாரம், திமுக தமிழ்நாட்டில் செய்வதைப் போலவே, காஷ்மீரிலும் நடத்தப்படுகிறது.இந்தியாவில் விசா முறைகேடுகள் மூலம் புகுந்து வாழும் பாகிஸ்தானியர்களும், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கண்டிக்கப்பட வேண்டும். இதை கண்டித்து நாடு முழுவதும் பா...
மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

அரசியல், கல்வி - வேலைவாய்ப்பு
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த அரசுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், “நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக இருக்கிறது. திருமண தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் எழுதச் சொல்வது வரலாற்றிலேயே இல்லாத அத்துமிரல்,” எனக் கூறினார்.மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தும் முன்முயற்சியை சட்ட ரீதியாக ஆய்வு செய்து முடிவெடுக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உயர்வு செயல்படுத்தப்படும்போது சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்பு இருப்பதால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும் எனவும் கூறினார்.மாணவர்களின் கல்வி முன...
ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த அரசுப் பல்கலைக்கழகங்கள்…

ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த அரசுப் பல்கலைக்கழகங்கள்…

அரசியல்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழகங்கள் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மாற்றப்பட்ட பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுவதால், இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் உதகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் தமிழகத்தின் 19 அரசுப் பல்கலைக்கழகங்கள், 9 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 3 மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அரசுப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளன. அதில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரர் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 41 பேருக்கு அழைப்பு...
கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

அரசியல், கோவை
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜய் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளன.இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் நிலையில், முதல் மாநாடு கோவையில் ஏப்ரல் 26ம் தேதி (நாளை) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர...
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

அரசியல், தமிழ்நாடு
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, சட்டவிரோதமாக சோதனை நடத்தப்பட்டது எனக் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது” என அமலாக்கத்துறை விளக்கமளித்தது.தரப்புகள் அடிப்படையில் அனைத்து வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. தேச நலனுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட்டது” எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், “நள்ளிரவில் சோதனை நடந்தபோது ...
‘இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்’ – கேபி ராமலிங்கம் விளக்கம்

‘இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்’ – கேபி ராமலிங்கம் விளக்கம்

அரசியல்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்" என அவர் கூறியதற்கு, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகள் முடிந்து, 5-ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதை எதிர்கொள்ள அதிமுக, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி முயற்சி செய்தது. ஆனால், அவர் ஒத்துழைக்காததால் பாஜகவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்தது.பாஜகவுடன் அதிமுக கூட்டணியைக் கடந்த நாடாளுமன்ற தேர்...
‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டம் மூலம் UPSC தேர்வில் சாதனை..

‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டம் மூலம் UPSC தேர்வில் சாதனை..

அரசியல்
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான ‘நான் முதல்வன்’ மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், ஒன்றிய அரசின் UPSC தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை பெற்றார். மேலும், அதே திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா என்ற மாணவி 39வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.2023 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், மாணவர்களின் நம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்க்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது 50 பேர் UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வெற்றியை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது X சமூக வலைதளத்தில்,"நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்த நாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச...
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

அரசியல்
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.“கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.“மக்களுக்கு சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசை எதற்காக வைத்திருக்கிறோம்? முதல் நாள் முதல் அரசு இயங்குகிறதா என்றே...
குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

அரசியல்
குஜராத்தத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாடு, கட்சியின் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு கடைசியாக 1961ஆம் ஆண்டு குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்றது. 1938ஆம் ஆண்டு ஹரிபுரா மாநாட்டில் ‘பூர்ண சுவராஜ்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இம்முறை மாநாடு மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் பிறந்தநாட்டில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.முக்கிய நிகழ்வுகள்:ஏப்ரல் 8: காங்கிரஸ் செயற்குழு அமர்வு ஷாஹிபாக்கில் நடைபெறும்.மாலை 5 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை கூட்டம்.மாலை 7.45 மணிக்கு ர...