Sunday, January 19

சினிமா – பொழுதுபோக்கு

கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!<br><br>

கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

சினிமா - பொழுதுபோக்கு
பிரபல இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கங்கை அமரன், சிவகங்கை அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்கும்போது உடல்நலக்குறைவால் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், தற்போதைய நிலைமையின் காரணமாக மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கங்கை அமரன், திரைப்படத்துறையில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான இடத்தை பிடித்தவர் என்பதுடன், தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளில் நடைபெற்று வருகின்றன....
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படப்பிடிப்பு தொடக்கம்…

செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படப்பிடிப்பு தொடக்கம்…

சினிமா - பொழுதுபோக்கு
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘மென்டல் மனதில்’ படப்பிடிப்பு இன்று வெகுஜனமாக தொடங்கியுள்ளது.இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷின் ’பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாரிக்கிறது.இயக்குநர் செல்வராகவன், இரு ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு, இயக்கத்திலிருந்து இடைவெளி எடுத்த செல்வராகவன், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் அவர் ‘சொர்க்கவாசல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படங்களில் செல்வராகவனுக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ், இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.செல்வராகவன்-ஜி.வி. பிரகாஷ் ...
ஆஸ்கர் விருதுகள் 2025: இந்தியாவின் லாபட்டா லேடீஸ் திரைப்படம் பட்டியலில் இருந்து நீக்கம்…

ஆஸ்கர் விருதுகள் 2025: இந்தியாவின் லாபட்டா லேடீஸ் திரைப்படம் பட்டியலில் இருந்து நீக்கம்…

சினிமா - பொழுதுபோக்கு
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவு பட்டியலில் இருந்து, இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பங்கேற்பாக இருந்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகள் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களை கவுரப்படுத்த ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கிரண் ராவ் இயக்கிய லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வாகி அனுப்பப்பட்டது. கடந்த மார்ச்சில் வெளியான இப்படம், ஒரே ரயிலில் பயணிக்கும் 2 மணமகள்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்றுவிடுவதால் ஏற்படும் குழப்பங்களையும் அதன்பின் நகரும் நிகழ்வுகளையும் படமாக்கியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு திரைப்படம் தேர்வு இந்நிலையில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் இரு...
“IMHA 55 மேஜிக் பீஸ்ட்-2024”: தேசிய அளவிலான மாயாஜால கருத்தரங்கு, போட்டிகள் நடைபெற்றது .

“IMHA 55 மேஜிக் பீஸ்ட்-2024”: தேசிய அளவிலான மாயாஜால கருத்தரங்கு, போட்டிகள் நடைபெற்றது .

சினிமா - பொழுதுபோக்கு
கோவை மாவட்டம் நல்லாயன் சமூக கூடத்தில் இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக "IMHA 55" மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டமும் ஜூனியர் சீனியர் மெஜிசியன்களுக்கு உண்டான தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது . இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கனகலட்சுமி டைமண்ட்ஸ் முரளி, ACP முருகேசன் உக்கடம், அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் சேகர், காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மேஜிசியன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகளும்,அப்பாதுரை நினைவு மற்றும் சூப்பர் செல்வம் நினைவு கோப்பைகளையும் இந்திய மாயாஜால சங்கத்தின் தலைவர் நந்தகுமார் பொதுச் செயலாளர் பிரகாஷ் சவுக்கூர் மற்றும் பொருளாளர் மிருணாளினி அமர்...
புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…

புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…

அரசியல், சினிமா - பொழுதுபோக்கு
பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி சம்பவம், திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கை சந்திக்க வைத்துள்ளது.கடந்த 5 ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான கூட்டம் குவிந்தது. ஒப்பனிங் ஷோவை காண அல்லு அர்ஜூன் நேரில் வருகை தந்தார்.இந்த கூட்ட நெரிசலின்போது, தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (39) என்பவர் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்தபோது மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.ரேவதியின் கணவர் புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், திரையரங்க மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குழுவினரைச் சேர்ந்தோரின் மீது ப...
கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா - பொழுதுபோக்கு
சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவக்கம்… தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் ஊடகத்துறை தொடர்பான அதி நவீன தொழில் நுட்பங்கள் தொடர்பான பாடத்திட்டங்களுடன் கோவை அருகே அஹலியா குழுமங்கள் சார்பாக புதிய திரைப்படக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.. கேரள- தமிழக எல்லை பகுதி அருகே உள்ள கோழிப்பாறை எனும் பகுதியில் இந்தியாவின் பெரிய ரெசிடென்ஷியல் திரைப்படப் பயிற்சிக் கல்லூரியாக துவங்கப்பட்டுள்ள கல்லூரியின...
ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

சினிமா - பொழுதுபோக்கு
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், உலகளாவிய அளவில் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், மிகப் பெரிய வெற்றியையும் சாதனையையும் பெற்றது.ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை பரிசளித்தார். மேலும், படக்குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.ஜெயிலர் படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு, இயக்குநர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு விடியோவுக்கான செட் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய...
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை

சினிமா - பொழுதுபோக்கு
மூக்குத்தி அம்மன் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர், அவர்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார் பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்....
36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி…<br>

36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி…

சினிமா - பொழுதுபோக்கு
பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 1068 கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் பங்கேற்பு... அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும்         இளைய தலைமுறையினர் இடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி மின்னல் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலாம் உலக சாதனைக்காக 36 மணி நேரம் இடைவிடா கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. கோவை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரதம், குச்சிபுடி, வள்ளிகும்மி, பழங்குடியினர் மற்றும் படுகர் இன மக்களின் நடனம், ஒயிலாட்டம்  மற்றும் பள்ளி மாணவர்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே, சி...
ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம் அப்டேட்…

ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம் அப்டேட்…

சினிமா - பொழுதுபோக்கு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.நடிகர் பட்டியல்:சவுபின் ஷாயிர்நாகர்ஜுனாசுருதிஹாசன்சத்யராஜ்உபேந்திராசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் தற்போது படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.'கூலி' படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு வரவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.'கூலி' படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன...