Monday, June 9

கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….


கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்து இருந்த பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தார். உடனே காவல் துறையினர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மான் கொம்புகள் இருந்தன. உடனே அந்த பையை கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமி சரண் என்பவரை காவல் துறையில் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆவணங்கள் இன்றி மான் கோம்புகள் வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது ?  விற்பனை செய்ய கொண்டு வந்தாரா ?  என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  "கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றம்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக நடனம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *