
கோவையைச் சேர்ந்த 9 இளம் வீரர்கள் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர்: ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி அறிவிப்பு…
இந்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரில் கோவையைச் சேர்ந்த ஒன்பது இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல், இந்திய அணியின் செயல் திறன் ஆய்வாளராக பதவி ஏற்ற ஹரி பிரசாத் மோகனை கௌரவிக்கும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி, கடந்த 22 ஆண்டுகளாக இளைஞர்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக விளங்குகிறது என நிர்வாகிகள் நிலேஷ் ஷா மற்றும் பிரேம்குமார் தெரிவித்தனர். இம்மையத்தில் பயிற்சி பெற்று, இந்திய அணியின் செயல் திறன் ஆய்வாளராக உயர்ந்த ஹரி பிரசாத் மோகன் சிறந்த முன்னுதாரணம் என அவர்கள் புகழ்ந்தனர்.அதேபோல், ராதாகிரு...