Friday, February 7

விளையாட்டு

 

68வது தடகள போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற பள்ளி மாணவி<br><br>

68வது தடகள போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற பள்ளி மாணவி

விளையாட்டு
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா தங்கம் வென்று முதல் இடத்தையும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜானவி வெள்ளி பதக்கம் வென்று  இரண...
தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டி: வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு<br><br>

தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டி: வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

விளையாட்டு
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!10வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்திலிருந்து 10, 14, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும், சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும் 90க்கும் மேற்பட்ட ஸ்கேடிங் வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இத...
2024 ஆசிய இளம் மற்றும் ஜூனியர் வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி…

2024 ஆசிய இளம் மற்றும் ஜூனியர் வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி…

விளையாட்டு
2024 ஆசிய இளம் மற்றும் ஜூனியர் வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப்ஸ் தற்போது டிசம்பர் 19 முதல் 25 வரை துபாயில் நடக்கிறது. இந்நிகழ்ச்சி இளம் (வயது 13-17) மற்றும் ஜூனியர் (வயது 15-20) பிரிவுகளுக்கு ஆகமொத்தம் 40 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் ஸ்நாச், கிளீன் அண்ட் ஜெர்க், மற்றும் மொத்தத் தகுதிகளில் தனித்தனியாக பதக்கங்கள் வழங்கப்படும். இந்தியா இந்த போட்டிக்கு 28 வீரர்களை அனுப்பியுள்ளது. இதில் 15 பேர் ஜூனியர் பிரிவில், 13 பேர் இளம் பிரிவில் போட்டியிடுகின்றனர். முக்கியமாக, பெண்களின் +87 கிலோ எடை பிரிவில் இரண்டு தேசிய சாதனைகளை நிகழ்த்திய மார்டினா தேவி மைபாம் மற்றும் ஐடபிள்யூஎப் ஜூனியர் உலக வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப்ஸில் 55 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தனுஷ் லோகநாதன் ஆகியோர் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். டிசம்பர் 20 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கியு...
திருப்பத்தூரில் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்…

திருப்பத்தூரில் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்…

விளையாட்டு
சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தில் காரையூர் புதுவளவு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பாக  மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.திருப்பத்தூர்- திண்டுக்கல் சாலையில்  பெரிய மாடு, சின்னமாடு என  இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 22ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 47 ஜோடிகள் என மொத்தம் 69 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்....
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

விளையாட்டு
சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து 2018-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்தில் வழங்கி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் இருந்து 30-0க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தானில் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடி அசைத்து துவங்கி வைத்தார். 10 கிமீ,5 கிமீ,3 கிமீ மற்றும் 1கிமீ என நான்கு வெவ்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு நரம்பியல் குழந்தைகளுக்காக 1 கிமீ வகையை மாரத்தான் போட்டி நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்...
கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் சார்பாக பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் சார்பாக பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

விளையாட்டு
கோவை மாவட்டம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது. தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற ,இதன் துவக்க நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மேயர் ரங்க நாயகி கலந்து கொண்டு மாரத்தானை துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், 18 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த மாரத்தான் கோவில் பாளையம...
கோவையில் நடைபெற்ற 27வது ஜே.கே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி

கோவையில் நடைபெற்ற 27வது ஜே.கே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி

விளையாட்டு
கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 27-ஆவது ஜேகே டயர் தேசிய கார் பந்தயத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது. ஏற்கனவே அதிக புள்ளிகளைப் பெற் றிருந்த பெங்களூரைச் சேர்ந்த இளம் வீரர் திஜில் ராவ் இறுதிச் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார். இறுதிச் சுற்றை திஜில் ராவ் 21:25 நிமிஷங்களில் நிறைவு செய்து பட்டத்தை வென்றார். எல்ஜிபி ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக 87 புள்ளிகளுடன் திஜில் ராவ் முதல் இடத்திலும், 45 புள்ளிக ளுடன் பால பிரசாத் 2வது இடத்திலும், 44 புள்ளிகளுடன் மெஹுல் அகர்வால் 3வது இடத்திலும், 43 புள்ளிகளுடன் கோவையைச் சேர்ந்த சரண் 4வது இடத்திலும் உள்ளனர்.அதேபோல ஜேகே டயர் ராயல் என்பீல்டு கான்டினென் டல் ஜிடி கோப்பைக்கான போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த நவநீத்குமார் 10 சுற்றுகளை 13:01 நிமிஷங்களில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரைத் தொடர்ந்து அனிஷ் ஷெட்டி 2-ஆவது இடத்தையும், மன்வித் ரெட்ட...
<br>மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல்  போட்டியில் கோவை பள்ளி மாணவி தங்கப்பதக்கம்..


மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல்  போட்டியில் கோவை பள்ளி மாணவி தங்கப்பதக்கம்..

விளையாட்டு
கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி  அஸ்வினி. இவர் ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல் போட்டியில்  19 வயதுக்கு உட்பட்ட பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று  சாதனை படைத்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். இவர் வருகிற நவ. 26 முதல்  30ம் தேதி வரை மத்திய பிரதேசம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில்  சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணன், தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணன்,  முதல்வர் ஜி. ஆண்டனி ராஜ், பள்ளி நிர்வாகி சாந்தினி அனீஷ் குமார், தலைமை ஆசிரியை லீனா, நிர்வாக அலுவலக அதிகாரி  உமாராணி,  உடற்கல்வி இயக்குனர் மோகன், மாணவியின்  பெற்றோர்கள் உள்ளிட்ட  பலர்  உடன் இருந்தனர்....
மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு…

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி, விளையாட்டு
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு  வரலாறு பாடப் பிரிவில் பயிலும் மாணவி மேக்லின் டோரத்தி என்ற மாணவி 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் அதேபோல 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். தொடர்ந்து தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற மேக்லின் டோரத்திக்கு பள்ளி சார்பில் மாலை அணிவித்து மேல தாளங்கள் முழங்க புரத்தாகுடி பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரை மேல தாளங்களுடன் பேரணியாக மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளித்து தடகள வீராங்கனை மாணவி மேக்லின் டோரத்தியை பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர...
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா…

விளையாட்டு
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் விழா: 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பாரா ஒலிம்பிக் வீரர்கள் தங்கவேலு மாரியப்பன் மற்றும் துளசிமதி முருகேசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இவ்விழாவின் முக்கிய நோக்காக விளையாட்டு வீரர்களை உருவாக்குவது என கூறினார்.இதைத் தொடர்ந்த...