
போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் சோதனை மேற்கொண்ட குடியுரிமை பிரிவு அதிகாரிகள், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை இந்திரா நகரைச் சேர்ந்த முகமது அன்சாரி (வயது 50) மலேசியா செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போலியாக மாற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 56) மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்திருந்தார். அவரையும் சோதனையிட்ட போது, போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் இருவர் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்....