Thursday, May 15

திருச்சி

போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

தமிழ்நாடு, திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் சோதனை மேற்கொண்ட குடியுரிமை பிரிவு அதிகாரிகள், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை இந்திரா நகரைச் சேர்ந்த முகமது அன்சாரி (வயது 50) மலேசியா செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போலியாக மாற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 56) மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்திருந்தார். அவரையும் சோதனையிட்ட போது, போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் இருவர் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்....
குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

திருச்சி
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை, கீரமங்கலம் மற்றும் கிருஷ்ணா நகரில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டு மின்சாதனங்கள் பழுதடையும் சிரமத்திற்குள் உள்ளாகினர். இந்த நிலை தொடராமல் இருக்க, பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிணங்க, பிச்சாண்டார்கோவில் மின்சார வாரியத்தின் இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் துரைராஜின் மேற்பார்வையில், மின்சார வாரிய ஊழியர்கள் 110 கிலோவாட் திறனுடைய இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை கீரமங்கலம், கிருஷ்ணா நகர் மற்றும் சாய்நகர் பிரிவு சாலைகளில் நிறுவினர். இத்தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தனது நன்றியை தெரிவித்தனர். ...
பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

திருச்சி
புதுச்சேரியில் வேனில் சென்றுவந்த அரசு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணவெளி தொகுதகுட்பட்ட தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவியிடம் வேன் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமையில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நையினார்மண்டபத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (25), வேன் ஓட்டுநரான இவர் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுக்கும் அழைத்து வரும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் வேனில் பயணித்த அரசு பள்ளியில் 9 ...
போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் புதிய POSH (போஷ்) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு. பீர்முகமது, பகுதி துணை செயலாளர் சந்திரமோகன், மற்றும் திருச்சி மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பைசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.POSH அழகு நிலையம் அதி நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த வல்லுநர்களை கொண்டு ஃபேஸ் வாஷ், ஹேர் கட்டிங், திருமண அலங்காரம், ஹேர் டை உள்ளிட்ட பல்வேறு அழகு சேவைகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த செலவி...
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”<br><br>

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”

திருச்சி
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோரிக்கை வைத்துள்ளார்.திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையிலான கூட்டத்தில், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநிலச் செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டின் நோக்கம், இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய சமுதாயத்தை நல்ல வழியில் வழிநடத்துவதாகும் என அவர் தெரிவித்தார்.திருப்பரங்குன்றத்தில் தர்கா-கோவில் விவகாரம் மூலம், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்து-முஸ்லிம் மக்களிடையே மத வெறியை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார். ...
மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

திருச்சி
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் கீழ், திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் தலைமையிலாக, மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு, இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் M. முஹமது ஷரிப் (M.Com, M.Phil) கலந்து கொண்டு, இளைஞர் அணியின் அவசியம், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.கூட்டத்தில் இளைஞர் அணியின் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், அரசியல் பயிலரங்கம், மற்றும் உறுப்பினர் சேர்க்கை முக...
அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

திருச்சி
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், 21-வது வார்டின் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாயில் தேங்கிய குப்பைகள் பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நிலை சுகாதார சீர்கேட்டுக்கும், நோய் தொற்று அபாயத்திற்கும் காரணமாக உள்ளது. இதை தீர்க்க தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மாநகராட்சியின் அலட்சியமே இந்த சாக்கடை பிரச்சனைக்கு காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் எச்சரித்தார்.இந்...
ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

திருச்சி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கு அருகிலுள்ள "ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு - ராஜ்நகர் நலச்சங்கத்தின்" இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இணக்கத்தையும், நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கண்களை மூடி பானை உடைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், ஓட்டப் பந்தயம், கோலப்போட்டி, சமையல் போட்டி, சைக்கிள் பந்தயம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஞாயிறு மாலை, குழந்தைகள் மற்றும் மாணவர்களால் நடனம், பாடல், மேடைப் பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் அவர்களின் திறமைகள் வெளிப்பட்டன. இந்த விழாவை திரு S. மனோஜ்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தா...
ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

திருச்சி
திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேரோட்டத்தையொட்டி பூச்சொரிதல் விழா தொடங்கியது.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பமாகியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இந்த கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முன் நிலையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலாக பரவலாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா காலை தொடங்கியது. கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். அதற்கு முன், கோவில் குருக்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்தனர். பின்னர், ஆதி மாரியம்மனுக்கு அ...
“மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்”

“மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்”

திருச்சி
திருச்சி:தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கம், தலைவரான பாபநாசம் வேலு தலைமையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தலைமை பொறியாளர்களை சந்தித்து, 13 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர். 2023-ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையினரால், தமிழக முழுவதும் உள்ள அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. இதனால் அனைத்து அரசு மணல் குவாரிகளும் இன்று வரை மூடப்பட்டுள்ளன. இதனால், மணல் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் வேலை இழந்துள்ளன, மேலும் அதன் விளைவாக மணல் லாரி உரிமையாளர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.மணல் குவாரிகள் இயங்காததால், கட்டுமானத் தொழில்களுக்கு மணல் இன்றியமையாத தேவையாக இருந்தாலும், செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலைக்கு மணலை விற்று பொதுமக்களையும் அரசு அலுவலகங்களையும் ஏமாற்றி வருகின்ற...