பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவின் நான்கு வழிச்சாலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற ஒரு சொகுசு கார், தாமரைக்குளம் அருகே முன்போன மூன்று இருசக்கர வாகனங்களை மோதியது. இந்த விபத்தில், ஒருவரை உயிரிழந்த நிலையில்,ஆறு பேர் கடுமையாக காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால், கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து மிகுந்த இடையூறுக்கு உள்ளானது. கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விபத்து தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us
Recent Posts
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
-
தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு
-
ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
கிணத்துக்கடவில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது: 260 மது பாட்டில்கள் பறிமுதல்
Leave a Reply