Thursday, May 22

பொள்ளாச்சியில் தாமரைக்குளம் அருகே கார் மோதி விபத்து: ஒருவர் பலி, ஆறு பேர் காயம் !

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவின் நான்கு வழிச்சாலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற ஒரு சொகுசு கார், தாமரைக்குளம் அருகே முன்போன மூன்று இருசக்கர வாகனங்களை மோதியது. இந்த விபத்தில், ஒருவரை உயிரிழந்த நிலையில்,ஆறு பேர் கடுமையாக காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால், கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து மிகுந்த இடையூறுக்கு உள்ளானது. கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விபத்து தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *