விக்கிபீடியா மீது ANI நிறுவனம் அவதூர் வழக்கு தொடர்ந்துள்ளது..

ANI செய்தி நிறுவனம் விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது அவதூறு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.

விக்கிப்பீடியாவில், “மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில், விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது, ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க  ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது.....

Wed Jul 10 , 2024
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, வாக்களிக்க அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்தினருடன்  வருகை தந்தவர் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் […]
1669289523 9159 - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது.....

You May Like