தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கம். இதற்காக, ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுகிறது, அதாவது மக்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி சொந்த ஊர் செல்லவுள்ளவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதால், மக்கள் தயாராகி கொள்ள வேண்டும். இணையதளம் அல்லது ரயில் நிலையங்கள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் மீன் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

Tue Jul 2 , 2024
• ஜப்பான் ஜூலை 3, 2024 அன்று புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது, இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் 3Dயில் சுழலும் வகையில் இருக்கும். • புதிய ரூபாய் நோட்டுகளில் பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தொட்டுணருவதன் மூலம் மதிப்பை அறிய தொட்டுணரக்கூடிய குறியீடுகள் அடங்கும். • மார்ச் 2025 இன் இறுதிக்குள் 7.5 பில்லியன் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும், ஏற்கனவே உள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் […]
IMG 20240702 WA0001 - ஜப்பானில்  ஹோலோகிராபியை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

You May Like