Friday, February 7

நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து !

நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம்.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்.

பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்படும்.

இதையும் படிக்க  எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *