Friday, August 1

தமிழ்நாடு

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழ்நாடு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.“கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவே 9 மணிக்கே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாருடன் மரண வாக்குமூலம் மற்றும் குடும்பத்துக்காக எழுதிய இரண்டு கடிதங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.மரண வாக்குமூலம் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், சிலருடன் பணப்பரிவர்த்தை பிரச்னை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கு மரணம் நேர்ந்தால், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களில் யாரேனும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் 4-ஆம் தேதி காலை அவரின் சடலம் வீட்டுக்கு பின்புள்ள தோட்டத்தில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்க...
தனுஷ்கோடி செல்ல தடை

தனுஷ்கோடி செல்ல தடை

தமிழ்நாடு
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்ட சூறைக் காற்று காரணமாக, தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.மேலும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
அமோனியா கசிவு விவகாரம்…

அமோனியா கசிவு விவகாரம்…

தமிழ்நாடு
எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் சில மாதங்களுக்கு முன்பாக திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினா். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி  மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலையை தாற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் இது தொடா்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில்,  இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று உரத்தொழிற்ச் சாலைக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,அரசின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ...
சார்பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை!

சார்பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை!

தமிழ்நாடு
விழுப்புரம் திரு.வி.க. நகரில்லுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்  போலீசார் சோதனை நடத்தினர்.ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், கூடுதலாக பணம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திங்கள்கிழமை(மே 20) இரவு துணைக் கண்காணிப்பாளர் சத்திய ராஜ் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.இதில்,கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், பணியிலிருந்த சார்பதிவாளர் லோகநாயகி உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்...
பிர்லா ஓபஸ் நிறுவனம் பிரத்தியேக தயாரிப்புகளுடன் திருச்சியில் தனது முதல் பிரான்ச்ஐசி கிளையை தொடங்கியுள்ளது.

பிர்லா ஓபஸ் நிறுவனம் பிரத்தியேக தயாரிப்புகளுடன் திருச்சியில் தனது முதல் பிரான்ச்ஐசி கிளையை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு
ஆதித்யா பிர்லா குழுமம் 80 ஆயிரம் கோடி ரூபாயில் இந்திய அலங்கார வண்ணபூச்சுக்கள் சந்தையில் "பிர்லா ஓபஸ்" என்ற பெயரில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் முதலீடு செய்து உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயில் நாடு முழுவதும் ஆறு உற்பத்தி நிறுவனங்களை நிறுவுவது எக்கோலாக பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி பெயிண்ட் பிராண்டுகளில் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ள பிர்லா ஓபஸ், 145 க்கும் அதிகமான தயாரிப்புகளோடு, 1200க்கும் அதிகமான SKU க்கல், நீர் சார்ந்த வண்ணபூச்சுகள், பர்சிப்பிகள், மர பூச்சுகள் மற்றும் வால்பேப்பர்கல் என 2300 க்கும் அதிகமான வண்ணமயமான தேர்வுகளுடன் விரிவு படுத்துகிறது. நேற்று (மே18)ஆம் தேதி அன்று பிர்லா ஓபஸ் நிறுவனம் திருச்சியில் தனது முதல் கிளை திறப்பு விழா உடன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது. பிர்லா ஓபஸ் பிரான்சைஸ் கிளையின் உரிமையாளர் திரு. சாம்சன் சிரில் ...
குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

தமிழ்நாடு
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்துக்கு அதி கனமழைக் காரணமாக  சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அம்மாவட்ட மக்களுக்கு  குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைக்கு  சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
மேகமலை அருவிக்கு செல்ல தடை

மேகமலை அருவிக்கு செல்ல தடை

தமிழ்நாடு
தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்துக்கு இன்றும்(மே 19), நாளையும்(மே 20) மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மேகமலை அருவிக்கு 3 நாள்களுக்கு (மே 21 வரை) செல்வதற்கு  தடை விதித்து அம்மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது....
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு!

தமிழ்நாடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் ரூ.294 இல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....
குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றால அருவிகளில் குளிக்க தடை

தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மே17 குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கில் 17 வயது சிறுவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழையகுற்றாலம் அருவியில் கொட்டிய குறைந்த அளவு தண்ணீரில்  சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறியடித்து வெளியேறினா். அப்போது தென்காசி அருகே மேலகரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்த அஸ்வின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாா்.தகவலறிந்து வந்த  தீயணைப்பு,காவல் துறையினா் மற்றும்  மீட்புப் பணி துறையினர்  அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.நீண்ட நேரம் தேடலுக்குப் பின் பழையகுற்றாலம் அருவியில்  சிறுவனின் உடல் மீட்கப்பட்...
மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

தமிழ்நாடு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு  ஊருக்குள் வந்த சிறுத்தை, ஐயப்பன் என்பவா் வீட்டில் வளா்த்து வந்த ஆட்டை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது ஆட்டை விட்டுவிட்டு அங்கு நின்ற நாயை தூக்கிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், பாபநாசம் வனச்சரகா் சத்யவேல் தலைமையில் வனத்துறையினா் பாா்வையிட்டனா். தொடா்ந்து வனத்துறையினா், வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தையும், அகஸ்தியா்பட்டி, பசுக்கிடைவிளை பகுதிகளில் கரடி நடமாட்டத்தையும் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா்.இந்த நிலையில், வேம்பையாபுரத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த  சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கோதையாறு...