Friday, November 14

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்துக்கு அதி கனமழைக் காரணமாக  சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அம்மாவட்ட மக்களுக்கு  குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைக்கு  சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  விடுதலை சிறுத்தைகள் மது ஒழிப்பு மாநாடு தேர்தல் பேரம் அல்லது திமுகவுக்கு மிரட்டல்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் .....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *