
ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி…
காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால் விவசாயிகள் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இடம் கோரிக்கை வைத்தனர்,
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்க்கால்களை சீரமைத்தார்.
புதுவாத்தலை, ராமவாத்தலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ..
சென்ற மாதம் மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திறந்து விடப்பட்ட இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் தாங்காமல் தடுப்பண...