Tuesday, January 21

நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சீமான் சுற்றுப்பயணம்…

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 8.19 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் மூலம், கட்சி தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும், திமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு அடுத்த 3-வது பெரிய கட்சியாக போட்டியிட்டது. தற்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஒரு பகுதியாக, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யும், மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மாவட்ட வாரியாக கலந்தாய்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல்கட்டமாக, அவர் நாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடந்த மாவட்ட கலந்தாய்வில் பங்கேற்றார். அதன் பின்பு, பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். இன்று திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் நிறைவாக நாளை (ஆகஸ்ட் 27) தஞ்சாவூரில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.

இதையும் படிக்க  நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *