Sunday, June 15

மக்களவை தேர்தல்- தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…

*பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

*முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் உள்ள நிலையில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

*தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறும். வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *