Friday, July 4

அரசியல்

சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்…

சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்…

அரசியல்
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில் வரி உயர்வை உயர்த்திவிட்டனர் கூடுதலாக 6% வரியை உயர்த்தி விட்டனர் அதனை செலுத்த தவறினால் ஒரு சதவிகிதம் வட்டி போடுவது என்ற மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவர...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் – சிறப்பு முகாம்…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் – சிறப்பு முகாம்…

அரசியல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிகளில் நவம்பர் 9,10, 23,24 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். 2025ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட சரிபார்ப்பு வேலைகள் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெறுகின்றன. அக்.29 முதல் நவ.28 வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர்கள், தேவையான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக நவ.9,10, 23,24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 69,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு ம...
பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க நடவடிக்கை வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க நடவடிக்கை வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அரசியல்
வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உடனடியாக முன்னெச்சரிக்கை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை துணை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் இயங்கும் அவசர அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பேரிடர் மேலாண்மை, மழை அளவுகள் சேகரிப்பு, வானிலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட முறைகளை விவரித்து கேட்டறிந்த அவர், புதிதாக அறிமுகப்படுத்திய ‘டிஎன் அலர்ட்’ செயலி மற்றும் ‘டிஎன்-ஸ்மார்ட்’ இணையதளம் குறித்தும் ஆராய்ந்தார். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கான தேடல், மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அத்துடன் அனைத்து ...
“வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்”

“வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்”

அரசியல்
உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்.. மாறி கொண்டு வரும் வாழ்க்கை பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய் ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கிறார்கள்.இதயத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக நிறைய பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.அதை கடைபிடிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டி இருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்பதால் இதயத்துக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கின்றேன். துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் ...
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி திமுகவினர் கொண்டாட்டம்

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி திமுகவினர் கொண்டாட்டம்

அரசியல்
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது இதனை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கலைஞர் துணை முதல்வர் பதவி வழங்கிய போது இது பதவி அல்ல பொறுப்பு என கூறிய வாசகத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார் அவர் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் திமுகவில் அதிகளவில் எழுச்சியோடு...
தமிழக அமைச்சரவை நாளை மாற்றம்?

தமிழக அமைச்சரவை நாளை மாற்றம்?

அரசியல்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுடன், செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றின் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில், உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன், திமுகவில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப்போவதற்கு காரணமாக இருந்தது. தற்போது ஜாமீனில் வெளியேறியுள்ள அவர், அமைச்சராவதில் மீண்டும் பொறுப்பேற்க தடையில்லை. இதனால், விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றம் உறுதியாகியிருக்கிறது. தற்போது, தமிழக அமைச்சரவை 34 அமைச்சர்களைக் கொண்டுள்ளது. 35 பேர் வரை அமைச்சரவை உறுப்பினர்கள் இருக்க முடியும் என்பதால், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக இணைக்...
செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு திமுக அமைச்சர்கள், எம்.பி. ஜோதிமணி சந்திப்பு…

செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு திமுக அமைச்சர்கள், எம்.பி. ஜோதிமணி சந்திப்பு…

அரசியல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 26ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீனின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சம் உத்தரவாதம் அளிக்க வேண்டும், மேலும் வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இன்று காலை, திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்து வரவேற்பு தெரிவித்தனர். கரூர் எம்.பி. ஜோதிமணி...
த.வெ.க. மாநில மாநாடு 17 நிபந்தனைகளுடன் அனுமதி…

த.வெ.க. மாநில மாநாடு 17 நிபந்தனைகளுடன் அனுமதி…

அரசியல்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி, 17 நிபந்தனைகளுடன் காவல்துறையால் வழங்கப்பட்டிருக்கிறது. வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலில் செப்டம்பர் 23ம் தேதி மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால், மாநாட்டுத் தேதி அக்டோபர் 27க்கு மாற்றப்பட்டு, இந்தத் தேதி அங்கீகாரம் பெறப்பட்டது. அக். 27ம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டிற்கு காவல்துறை விதித்த 17 நிபந்தனைகளில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது முக்கியமானதாகும். தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் அல்லது கட்-அவுட்கள் வைக்கக் கூடாது. மேலும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பான இடவசதி, மாநாட்டுத் திடலில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற வசதிகள் கிடைக்க வேண்டும். அத...
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வெடி வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வெடி வெடித்துக் கொண்டாடிய திமுகவினர்

அரசியல்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்து உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் நகர திமுக அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டனர் இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து தேர்நிலையம் வரை ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதில் நகர மன்ற தலைவர் சியாமளா துணைச் செயலாளர்கள் தர்மராஜ் நாச்சிமுத்து பாத்திமா தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வெட...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது…

அரசியல்
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் (PMLA) தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையால் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, 2024 மார்ச் மாதம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 12ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, செப்டம்பர் 26, 2024 அன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை வரவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு பிணை கிடைத்துள்ளது. அரசியல் எதிரிகளை ஒடுக்கும் கருவியாக அமலாக்கத்துறையை மாற்றிய சூழலில், உச்சநீதிமன்றம் தான் நியாயம் பறைசாற்றும் தளம். அவசர நிலை காலத்திலும் இவ்வளவு நாட்கள் சிறைவாசம் நிகழவில்லை. ...