Sunday, April 27

சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்…

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார்.

சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்...

இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில் வரி உயர்வை உயர்த்திவிட்டனர் கூடுதலாக 6% வரியை உயர்த்தி விட்டனர் அதனை செலுத்த தவறினால் ஒரு சதவிகிதம் வட்டி போடுவது என்ற மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்த அவர் வேலை வாய்ப்பினை மின் கட்டண உயர்வு போன்றவற்றால் சிரமப்படுவதாகவும் எனவே இவற்றையெல்லாம் கண்டித்து தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்துவதாகவும் அறிக்கை வாயிலாக கண்டனத்தை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் வருகின்ற எட்டாம் தேதி மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்தி இருப்பதாகவும் அதனை எப்படி சிறப்பான முறையில் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். விலை உயர்வை நிறுத்துகின்ற வகையில் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திமுக கோவை மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த ஒரு திட்டத்தையும் தரவில்லை எனவும் எனவே மக்கள் மிகவும் அவதியுற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார். எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் எனவும் விடுபட்ட மற்றும் செய்யாத திட்டங்களை எல்லாம் அவர் தலைமையில் செய்வோம் என தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் என்பதே அனைவருக்கும் ஆனது எனவே பொதுமக்கள் தொழில்துறையினர் தொழிலாளர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.

மும்முனை மின்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுதே முழுமையாக அறிந்ததாகவும், ஆனால் தற்பொழுது உள்ள திமுக அரசாங்கமே முழுமையாக வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களுக்கு பீக் ஹவர் கட்டணம் உட்பட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *