Sunday, August 3

தமிழ்நாடு

ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை…

ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை…

தமிழ்நாடு
பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் அணை இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அணை நீர்பிடிப்பு பகுதியில் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன் கூட்டியே தொடங்கியது. இதனால் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று சிறுவாணி அணை பகுத...
கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் !

கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் !

தமிழ்நாடு
திருத்துறைப்பூண்டியில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து300  மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்காவிரி டெல்டா பாசனம்  மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தற்போது ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்று வருகிறது குறிப்பாக கர்நாடக அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் நிரம்ப இருந்தும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க மறுத்து அதற்கு ஆதாரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள கர்நாடக அரசு கண்டித்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசு அறிவுறுத்திட வேண்டும் தமிழக அரசு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி பேசி உரிய ...
காவிரி நீா் விவகாரம் !

காவிரி நீா் விவகாரம் !

தமிழ்நாடு
காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு இன்று ( ஜுலை16 )ஆலோசனை நடத்தவுள்ளது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.  ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு  உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜுலை15) வெளியிட்டாா்....
கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்…

கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்…

தமிழ்நாடு
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களுக்கு நினைவாக ஒரு ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு கடந்த வருடம் கோரிக்கை வைத்தது.இந்த நினைவு நாணயத்தை, கலைஞர் கருணாநிதியின் நூற்றாவது பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அந்நாளில் நாணயத்தை வெளியிட முடியவில்லை.சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நாணயத்திற்கான அனுமதி கோப்பில் கையொப்பமிட்டதாக தகவல் வெளியானது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.ஆங்கிலம் மற்றும் இந்தியில் கருணாநிதியின் பெயருடன் “தமிழ் வெல்லும்” என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம்பெற உள்ளது. ...
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்த சுமார் 229 பேர், கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைப் பானமாகக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எதிர்கட்சிகள், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான த...
இளவரசன் கொலை வழக்கு

இளவரசன் கொலை வழக்கு

தமிழ்நாடு
திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி(42). ரவுடியான துரை மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உள்பட5 கொலை வழக்குள் உள்பட திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 64 க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை- திருச்சி மெயின்ரோட்டில் வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் இன்று மாலை அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அரிவாளால் வெட்ட முயன்ற துரையை போலீசார் என்கவுண்டர் செய்தனர்....
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு….

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு….

தமிழ்நாடு
திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.
கோவையில் ஆட்டுக் குட்டிகளை வேட்டையாடிய மர்ம விலங்கு – தீவிர விசாரணையில் வனத்துறை..!

கோவையில் ஆட்டுக் குட்டிகளை வேட்டையாடிய மர்ம விலங்கு – தீவிர விசாரணையில் வனத்துறை..!

தமிழ்நாடு
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்களையும், வீட்டு வளர்ப்பு விலங்குகளையும் வேட்டையாடி செல்வது வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் சுற்று வட்டார பகுதியில் கருஞ்சிறுத்தை ஆடு, மாடுகளை கொன்று அப்பகுதியில் உலா வந்ததாக செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்பில் உள்ள இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.அது சிறுத்தை தாக்கி தான் உயிரிழந்ததா..? என ஆய்வு செய்து வருவதாகவும் மேலும் வனப்பகுதிய...
அண்ணாமலை உருவப்படம் எரிப்பு திருச்சியில் பரபரப்பு….<br>

அண்ணாமலை உருவப்படம் எரிப்பு திருச்சியில் பரபரப்பு….

தமிழ்நாடு
தமிழ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை  தரக்குறைவாக பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் காங்கிரசார்  போராட்டம்.மாவட்ட செயலாளர் GMG  மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை உருவப்படத்தை காலணியால் அடித்துஉருவ படத்தை எரிக்க முயன்ற போது காங்கிரஸ் ஆறுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  பரபரப்பு...
3 புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது

தமிழ்நாடு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது அன்றைய நாள் முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் போராட்டம், ஆர்ப்பாட்டம் , மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது எட்டாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது கூட்டத்தில் பத்தாம் தேதி ரயில் மறியலில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட...