Tuesday, April 15

காவிரி நீா் விவகாரம் !

காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு இன்று ( ஜுலை16 )ஆலோசனை நடத்தவுள்ளது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.  ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு  உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜுலை15) வெளியிட்டாா்.

இதையும் படிக்க  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் ரிசர்வேசன் கவுன்டர் திறக்கப்படும்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *