Monday, July 7

அரசியல்

கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில் சுவாதி மாலிவால் மீது தாக்குதல் :பாஜக

கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில் சுவாதி மாலிவால் மீது தாக்குதல் :பாஜக

அரசியல்
புதன்கிழமை லக்னோ விமான நிலையத்தில் நெருங்கிய உதவியாளர் பிபவ் குமாருடன் காணப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தாக்குதல் நடத்தியது . ராஜ்யசபா எம்பி சுவாதி மாலிவாலை தாக்கியதாக குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா இந்த தாக்குதலுக்கு கெஜ்ரிவால் திட்டமிட்டதாக குற்றம் சாட்டினார்....
பாஜக வெற்றி பெற்றால் அமித்ஷா பிரதமர்: கேஜரிவால் 

பாஜக வெற்றி பெற்றால் அமித்ஷா பிரதமர்: கேஜரிவால் 

அரசியல்
உத்தரப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் அடுத்த 3 மாதங்களில்  நீக்கப்படுவார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.  உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுடன், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது,”இந்தியா’ கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளேன். தற்போதைய நிலவரப்படி பாஜக 220-க்கும் குறைவான இடங்களையே பெறும்.  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது.” எனத் தெரிவித்தார்.பாஜக விதிமுறைப்படி, 75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.உத்தரப் பிரதேசத்தில் வருகின்ற 20-ஆம் தேதி முக்கிய தொகுதிகளான ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் ...
அமேதி தொகுதியில் எனது எதிராளி பிரியங்கா:ஸ்மிருதி இரானி

அமேதி தொகுதியில் எனது எதிராளி பிரியங்கா:ஸ்மிருதி இரானி

அரசியல்
பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் பிரியங்கா காந்தி வத்ரா என்றும், அவர் மேடைக்குப் பின்னால் இருந்து போராடுகிறார் என்றும் கூறினார்.  "குறைந்தபட்சம் அண்ணன் முன்னால் இருந்தான்" ஸ்மிருதி மேலும் கூறினார்."நான் சிறார் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை" என்று  கூறினார்....
மோடி வேட்புமனு தாக்கல்!

மோடி வேட்புமனு தாக்கல்!

அரசியல்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசி தொதியில் அவர் தொடர்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார். 2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றாா். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1- வாக்குப்பதிவு நடைபெற உள்ளது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அரசியல்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நாகை எம்.பி. செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவு  செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.இவர்,நான்கு முறை நாகை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர்.டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன...
பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி

பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி

அரசியல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 ஆவது பிறந்தநாளை 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்து வருகின்றனர்....
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை

அரசியல்
சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள கேஜரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இன்று  சந்திக்கிறார். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவதுகட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் டெல்லி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.பின்னர், கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பிறகு, தெற்கு டெல்லியில் தேர்தல் பிரசார வாகனப் பேரணிகளில் பங்கேற்றார்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அரசியல்
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில்  உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டார்....
இந்திரா காந்தியிடம் இருந்து மோடி கற்க வேண்டும்.

இந்திரா காந்தியிடம் இருந்து மோடி கற்க வேண்டும்.

அரசியல்
இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகியவற்றை பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தோ்தலின் நான்காம் கட்ட  வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் நந்துா்பாா் (தனி) தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பிரதமா் மோடியின் பேச்சுகள் அனைத்தும் வெற்றுப் பேச்சுகளே. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்களுக்கு தோ்தலில் போட்டியிட பாஜக ‘சீட்’ அளிக்கிறது. பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள குனிந்த தலையுடன் அவா்களின் வீட்டுக்குச் செல்வாா். ஆனால் ஏழைகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள அவா்களின் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்றதைப் போன்ற ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், நாட்ட...
அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

அரசியல்
டெல்லி முதலவா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன் வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மக்களவைத் தோ்தலை அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாத ஆளும் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற, தன்னாட்சி அமைப்புகளான வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றின் வழியாக எதிா் கட்சித் தலைவா்களை மிரட்டி பணிய வைப்பது, சிறையில் அடைத்து சிறுமைப்படுத்துவது போன்ற ஜனநாயக விரோத, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரவிந்த் கேஜரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி, தோ்தல் பரப்புரை செய்ய அனுமதித்திருப்பதை வரவேற்பதாக இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்....