Sunday, April 27

புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுச்சேரியில், குற்றப்பதிவேடு ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், போலீசாரின் குழுக்கள் காலையில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனை, ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில், புதுச்சேரி முழுவதும் ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைபுதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைபுதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

சோதனையின் போது, சந்தேகப்படும் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சோதனையில், வீட்டில் மறைந்து இருக்கும் தடை செய்யப்பட்டவர்கள், பயங்கர ஆய்தங்கள், வெடிகுண்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதா என்பதனைப் பற்றிய தீவிர சோதனை செய்யப்பட்டது.

குடும்பத்தினரிடமும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் முன் தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க  அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *