Wednesday, August 6

தமிழ்நாடு

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தை எதிர்த்த ஆட்கொணர்வு மனு – 26 ஆம் தேதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தை எதிர்த்த ஆட்கொணர்வு மனு – 26 ஆம் தேதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

தமிழ்நாடு
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த  ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்த...
அதிகபட்ச பால் கொள்முதல் செய்துள்ள ஆவின் நிறுவனம்…..

அதிகபட்ச பால் கொள்முதல் செய்துள்ள ஆவின் நிறுவனம்…..

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 இலட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 இலட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது.மேற்காணும் கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொது மக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும். மேலும் பொது மக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் ...
மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல் போராட்டம்.

மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல் போராட்டம்.

தமிழ்நாடு
திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறது.காந்தி மார்க்கெட்டை ஒட்டி மீன் மார்க்கெட், கறிக்கடை மார்க்கெட் உள்ளது .இந்த பழைய மார்க்கெட் அகற்றப்பட்டு ரூ 13 கோடியில் 148 கடைகள் மீன் மார்க்கெட்டிற்காக கட்டப்பட்டது. இதில் கீழ் தளத்தில் 74 கடைகளும், மேல் தளத்தில் 74 கடைகளும் கட்டப்பட்டன. இந்த கடைகள் பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கையும் வியாபாரிகள் வாபஸ் பெற்றனர்.இந்நிலையில் பழைய வியாபாரிகளுக்கு வழங்கப்படாது. நீங்கள் அனைவரும் டெண்டரில் கலந்து கொண்டு கடைகளை ஏலம் எடுக்க வேண்டு...
நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து !

நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து !

தமிழ்நாடு
நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம்.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்.பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்படும்....
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது<br>

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழ்நாடு
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்விநீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்."ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். "நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்"பணமிருந்தால் இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் - ராகுல் காந்திபணமிருந்தால் போதும்; இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் என மக்கள் பேசுகின்றனர்.லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது; இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி-மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கா...
செந்தில் பாலாஜி மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணையை  நாளை மறுநாள் மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்  வாதங்களை முன்வைத்தார் அறுவை சிகிச்சை செய்த ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்...
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள  திமுக அரசை கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அதிமுகவினர் அல்லித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி. விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்...
திருச்சி மாவட்டம்  சிறுகனூர்  மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  பத்திற்கு மேற்பட்ட  நபர்களுக்கு எலும்பு முறிவு

திருச்சி மாவட்டம்  சிறுகனூர்  மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  பத்திற்கு மேற்பட்ட  நபர்களுக்கு எலும்பு முறிவு

தமிழ்நாடு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் விரைவு பேருந்து இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்ததுதிருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் மேம்பாலத்தில் சென்றபோது முன்னாள்  மணல் ஏற்றி சென்ற டாரஸ் லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு படு காயம் அடைந்தனர்  இந்த விபத்தை அறிந்து வந்த சிறுகனூர் போலீசார் காயம் பட்ட பயணிகளை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 நபர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து சிறுகனூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்....
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்….

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்….

தமிழ்நாடு
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 அமர்வுகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை (23.07.24) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.