Thursday, August 7

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !

ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !

தமிழ்நாடு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் சுமையால் 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு தாயும் தூக்கி மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - கீர்த்திகா தம்பதியினர்.15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கோகுல்நாத், சாய் நந்தினி என் இரு பிள்ளைகள் உள்ளனர்.கிருஷ்ணமூர்த்தி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் அரவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.கீர்த்திகா கூலி வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிஇருவரும் அவ்வப்போது கடனை எவ்வாறு திருப்பி கொடுப்பது பேசி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில்லுக்கு வேலைக்கு செ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றிற்கு இன்று அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் திருச்சி நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி  ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்....
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…<br><br>

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…

தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,  அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த  ஜப்பானீஸ் யென் மற்றும் யூரோ வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்,  அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய ரூபாய் மதிப்பு 10 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்....
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு  35,692 கன  அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு நேற்று இரவு  33,367  கன அடியாக இருந்த நிலையில் தற்போது  31,852   கன அடியாக குறைந்துள்ளதுஅணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளதுஅணையில் இருந்து காவிரி ஆற்றில்  உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு 10,608   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 10,692  கன அடியாக அதிகரிப்பு கபிணி  அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு 17,877   கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,147  கன அடியாக அதிகரிப்புஅணையின் நீர்மட்டம் 84 அடியில் 82.25 அடி உள்ளதுஅணையில் இருந்து உபரிநீர் திறப்பு  வினாடிக்கு நேற்று இரவு   25 ஆயிரம்  கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரம்  கன அடியாக நீடிக்கிறது இரு  அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு நேற்று இரவு 35,608 கன அடியாக இருந்த நிலையில் தற்போது  35,692 கன அடியாக அதிகரிப்பு....
கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலை சாலையில் நின்று கொண்ட மூன்று காட்டு யானைகள் – வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி விரட்ட முயன்ற செல்போன் காட்சிகள்.<br>

கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலை சாலையில் நின்று கொண்ட மூன்று காட்டு யானைகள் – வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி விரட்ட முயன்ற செல்போன் காட்சிகள்.

தமிழ்நாடு
கோவை மேற்கு தொடர்ச்சி மலையைப் பகுதிகளில் அமைந்து உள்ளது மருதமலை சுப்பிரமணி சாமி கோவில். முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு வாகனங்கள் செல்லும் சாலை மற்றும் படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பாதை என இரண்டு பாதைகள் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி ஒற்றை யானை மற்றும் யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்து வனப் பகுதிகளுக்கு சென்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனது குட்டிகளை பாதுகாப்புடன் வனப்பகுதியில் அழைத்துச் சென்றது. மேலும் படிக்கட்டு பாதையில் ஒற்றைக் காட்டு யானை பல மணி நேரம் நின்றதால் நடந்து சென்ற பக்தர்கள் திரும்பி வீட்டுக்கு செல்ல கால தாமதம் ஏற்பட்டது. இதனால் மருதமலைக்கு செல்ல ஆறு மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் வனத் துறையின...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நான்கு பேர் சம்மன்  வழங்கிய கோவை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நான்கு பேர் சம்மன்  வழங்கிய கோவை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்.

தமிழ்நாடு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்து நடத்தி வந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சயன், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் இதுவரை 300 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள உதயன் மற்றும் தீபு ஆகியோர் ஜூலை 25 ஆம் தேதியும். ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ...
கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் – மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.<br>

கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் – மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு கடந்த 19-ந்தேதி  பொறுப்பேற்றார். இவருடைய மனைவி அனு. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், அரசு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது  கடலூர் மாநகராட்சி ஆணையராக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்-ஆணையாளர் அனு தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடலூர் மாநகராட்சியாக மாறியதற்கு பிறகு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக அனு பதவி ஏற்க உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக கணவனும், கடலூர் மாநகராட்சி ஆணையாளராகவும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்....
திருச்சியில் மனை உட்பிரிவு செய்து கொடுக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் கைது செய்யப்பட்டார்.<br>

திருச்சியில் மனை உட்பிரிவு செய்து கொடுக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் முனியப்பன்(59). இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார் அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11 .7 .2024 அன்று விண்ணப்பித்துள்ளார்.முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்தபோது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (34) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.அதற்கு முருகேசன் முனியப்பனின் மனையினை வந்து ஆய்வு செய்துவிட்டு உட்பிரிவு செய்து தர ...
கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம் – செல்போன் வீடியோ வைரல்.

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம் – செல்போன் வீடியோ வைரல்.

தமிழ்நாடு
  கோவை மாவட்டம் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அண்மையில் தடாகம் வனப் பகுதியில் இருந்து மருதமலை வனப் பகுதிக்குள் வந்த இந்த யானை கூட்டம் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை உடைத்து அரிசி புண்ணாக்கு, உள்ளிட்ட உணவு பொருட்களை தேடுவதால் மனித விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை கூட்டம்  புகுந்தது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த வனத் துறையினர் யானை கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர். 10 யானைகளும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதை அங்கு இருந்த...
கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 5 கடமான்கள் : வனத்தில் விடுவித்த வனத் துறையினர் – துள்ளி குதித்து வனப் பகுதிக்குள் சென்றது.<br>

கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 5 கடமான்கள் : வனத்தில் விடுவித்த வனத் துறையினர் – துள்ளி குதித்து வனப் பகுதிக்குள் சென்றது.

தமிழ்நாடு
கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவித்திட முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத் துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் ஒரு அங்கமாக  வ.உ.சி பூங்காவில்  பராமரிக்கப்படும் கடமான்களை மாற்றம் செய்திட அதன் புழுக்கைகளை ("faecal pellets") ஆய்வகத்திற்கு ("AIWC, Vandalur") அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.பின்பு மார்ச் 2024 மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணு...