
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் …
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாள் அம்மன் மரக்கேடயத்திலும், 2ம் நாள் கிளிவாகனத்திலும், 3ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும், 6ம்நாள் பல்லக்கிலும், 7ம்நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிவபமூஷிகமயூர வாகனத்திலும், 8ம்நாள் சிம்மவாகனத்திலும், விழாவின் 9ம் நாளான 6-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10ம் நாள் பல்லக்கிலும் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11ம் நாளான நேற்று முன்தினம் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுளினார்.
விழாவின் ம...