
ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
சென்னை: ஃபென்ஜால் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு உதவ பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்களை நேரில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள்கடலூர்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலு.கிருஷ்ணகிரி: அமைச்சர் சு. முத்துசாமி.தருமபுரி: அமைச்சர் ஆர். ராஜேந்திரன்.முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தின் நிலவரத்தை களத்தில் செயல்பட்டு வரும் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கேட்டறிந்து, மக்க...