Friday, July 4

அரசியல்

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

அரசியல், தமிழ்நாடு
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். யார் தேவை - தேவை இல்லை என்று தீர்மானிப்பார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதை பொருள் கலாச்சாரம் தான். மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. வருங்கால சமுதாயத்தின்  சீரழிக்கும் செயல்.முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும் என்றார். சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்...
த.வெ.க. கட்சிக்கொடி அறிமுகம் செய்து வைத்த விஜய்…

த.வெ.க. கட்சிக்கொடி அறிமுகம் செய்து வைத்த விஜய்…

அரசியல்
நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான "தமிழக வெற்றிக்கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில் விஜய் தனது வீட்டிலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு வந்து, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். கட்சியின் கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில், நடுவில் வாகை மலர் உள்ள வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது....
அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…

அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…

அரசியல்
தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தலைவர்களில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர், ஆனால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத காரணத்தால் அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. காவல்துறையின் தரப்பில், எதிர்காலத்தில் இவர்கள் உயிருக்கு எதுவிதமான அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதுகாப்பு மீண்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது....
லேட்ரல் என்ட்ரி முறை ரத்து – ஒன்றிய அரசு அறிவிப்பு

லேட்ரல் என்ட்ரி முறை ரத்து – ஒன்றிய அரசு அறிவிப்பு

அரசியல்
மத்திய அரசின் 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை தேர்வு செய்யும் அறிவிப்பு பல்வேறு தரப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நேரடி நியமனம் முறையை ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வந்த நிலையில், இப்போது 45 அதிகாரிகள் ஒரே கட்டமாக துணை மற்றும் இணைச் செயலாளர் பதவிகளில் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டனத்தையும் சந்தித்த, மத்திய அரசு லேட்ரல் என்ட்ரி முறையை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வரவேற்று வருகின்றனர், ஆனால் லேட்ரல் என்ட்ரி முறையை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக இடையே கடுமையான விவாதத்திற்கு காரணமாகியுள்ளது....
விஜய் முகத்துடன் தவெக கொடி அறிமுகம்

விஜய் முகத்துடன் தவெக கொடி அறிமுகம்

அரசியல்
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடி இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 2026 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். முன்னதாக, வரவிருக்கும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனிடையே, பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் தவெக கட்சியின் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகம் காட்சியளிக்கிறது. இது தவெகவின் அதிகாரப்பூர்வ கொடி என உறுதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை....
த. வெ. க. கட்சிக்கொடி விரைவில் அறிமுகம்…

த. வெ. க. கட்சிக்கொடி விரைவில் அறிமுகம்…

அரசியல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கியார். கட்சி தொடங்கிய நாளில் இருந்து, விஜய் பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போதும், அவர் அரசியலில் முழுநேரமாக ஈடுபட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், அரசியலுக்கு வருவதை தனது படங்கள் மூலம் மறைமுகமாகப் பதிலளித்துவந்தார். தற்போது, திமுகவின் முன்னணி உறுப்பினராக புஸ்ஸி ஆனந்த் தலையகமாக உள்ள “தமிழக வெற்றிக்கழகம்” கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தவிருக்கிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடியை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடியில், இரு வண்ணங்களுக்கு நடுவே வாகை மலர் இடம் பெறுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. வாகை மலர், பலவிதமான சங்க இலக்கியங்களில் வலுவான மரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இது “வெற்றியின் அடையாளம்” என்று பொருள் படுகிறது. விஜ...
முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை…

முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை…

அரசியல்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில், திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ, மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்...
வருகின்ற 28 ஆம் தேதி அண்ணாமலை லண்டன் பயணம்…

வருகின்ற 28 ஆம் தேதி அண்ணாமலை லண்டன் பயணம்…

அரசியல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள விரைவில் லண்டன் பயணம் செய்ய உள்ளார். லண்டனில் 3 மாதங்கள் தங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பாடங்களைப் படிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலைவின் இந்த பயணம் காரணமாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி பாஜகவினரிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக, பாஜக தலைமை ஆலோசனை நடத்தியது. பாஜக நிர்வாகிகளின் தகவலின்படி, அண்ணாமலை வரும் 28-ந்தேதி லண்டன் புறப்பட உள்ளார். செப்டம்பர் 2-ந்தேதி முதல் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை தொடங்க உள்ளார். அவர் லண்டனில் இருக்கும் 3 மாதங்கள் முழுவதும், அங்கிருந்தபடியே கட்சியின் முக்கிய விவகாரங்களை கவனிப்பார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராக நீடிப்பார் என தேசிய தலைமை விரும்புகிறது. கட்சியின் அமைப்பு பணிகளை கே...
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எங்கே?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எங்கே?

அரசியல்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே, 3 லட்சம் மக்களை அமர வைக்கக்கூடிய இடம் மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை செப்டம்பர் 22 அல்லது 26 ஆம் தேதிகளில் நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜய், கட்சி நிர்வாகிகளை நியமித்து, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த மாநாட்டின் அட்டவணை மற்றும் கொடி அறிமுகம் போன்ற விவரங்களை பொது செயலாளர் ஆனந்த் உடன் ஆலோசித்து வருகிறார். மாநாடு நடைபெறவுள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியில் திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்கள் பரி...
தேசியக்கொடி பேரணி நடத்த பாஜாவிற்கு அனுமதி…

தேசியக்கொடி பேரணி நடத்த பாஜாவிற்கு அனுமதி…

அரசியல்
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பாஜக சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் பைக் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் இந்த பேரணிகளுக்கு அனுமதி கேட்டு, அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் பாஜக மனு அளித்தது. ஆனால், காவல்துறை பைக் பேரணிக்கு அனுமதி மறுத்தது. இந்த நிலையில், கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத், பைக் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசியக்கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடியை மரியாதையுடன், கண்ணியமாக ஏந்தி, பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டனர். மேலும், பேரணியில் பங்கேற்பவர்கள், தேசியக்கொடிக்கு அ...