Thursday, May 15

தேசியக்கொடி பேரணி நடத்த பாஜாவிற்கு அனுமதி…

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் பாஜக சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் பைக் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் இந்த பேரணிகளுக்கு அனுமதி கேட்டு, அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் பாஜக மனு அளித்தது. ஆனால், காவல்துறை பைக் பேரணிக்கு அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத், பைக் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசியக்கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடியை மரியாதையுடன், கண்ணியமாக ஏந்தி, பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.

மேலும், பேரணியில் பங்கேற்பவர்கள், தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யக்கூடாது என்றும், பேரணி ஏற்பாட்டாளர்கள், பேரணியின் வழித்தடத்தை காவல்துறையினருக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க  "மோடி ஆட்சியின் கீழ்... மோடியின் ஊடுருவல் :ஒவைசி விமர்சனம்

இவ்வாறு, நிபந்தனைகளுடன், சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *