Thursday, October 30

பெரியாரின் 146வது பிறந்தநாளை ஆனைமலையில் தி.மு.க.வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்…

பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு ஆனைமலையில் தி.மு.க.வினர் வார்டு வாரியாக கொடியேற்றி இனிப்பு வழங்கி விழா கொண்டாடினர்.

பொள்ளாச்சி, செப். 17 – தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் தி.மு.க.வினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகர திமுக செயலாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில், ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மூத்த பெண் உறுப்பினர் பட்டத்தரசி கட்சி கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பேரூராட்சிக் கவுன்சிலர் அபுதாகிர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க.வின் கொடி ஏற்றப்பட்டது. மிலாடி நபி தினத்தையும் ஒட்டி, சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

பெரியாரின் 146வது பிறந்தநாளை ஆனைமலையில் தி.மு.க.வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்...
இதையும் படிக்க  அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *