Saturday, June 28

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை) மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். ராஜா அறிவித்துள்ளார்.

மின்தடை உள்ள பகுதிகள்: பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாகவுண்டனூர், ஆலம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டன் புதூர், சோழனூர், ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாய்க்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர்.

மின் பாதையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக இந்த மின்நிறுத்தம் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிக்க  இன்று அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *