Friday, February 7

கிருஷ்ணகிரி அருகே பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்ற மினிபஸ், தேசிய நெடுஞ்சாலையின் மையப் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின் காரணமாக பயணிகள் அனைவரும் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *