நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு வெறும் ரூ.95 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி, எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும், காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்கால தடை!
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply