கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

Screenshot 20240623 101640 Gallery - கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 19-ஆம் தேதி 21 பேரும், ஜூன் 20-ஆம் தேதி 20 பேரும், 21-ஆம் தேதி 9 பேரும் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் கள்ளக்குறிச்சியிலும், ஒருவர் சேலத்திலும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் 106 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என மொத்தம் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர், சென்னையில் அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.



இதையும் படிக்க  இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன முறையில் ஜாமின்  வழங்கிய நீதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *