Saturday, September 13

3-வது முறையாக கொல்கத்தா அபார வெற்றி!

ஐபிஎல் 2024 தொடா் இறுதி ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடா்ஸ். கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடா் பிளே ஆஃப் சுற்று முடிந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
பௌலிங்கில் ஹைதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 1-18, ஷாபாஸ் அகமது 1-22 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னா் ஹைதராபாத் அணிக்கு ரூ.13.5 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக (மென்டா்) கௌதம் கம்பீா் செயல்படும் நிலையில், மூன்றாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்க  தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டி: வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *