Saturday, June 28

ஜிப்மர் இரட்டை குடியுரிமை விவகாரம்: சுகாதார அமைச்சர், கவர்னரிடம் புகார் – சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி சட்டப்பேரவையில், சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதின்போது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இரட்டை குடியுரிமை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது என்று கூறினார்.

ஜிப்மரில் இந்தாண்டும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், இரட்டை குடியுரிமையுடன், புதுச்சேரி மாணவர்களுக்கான மருத்துவ சீட்டுகளை பறிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

“புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை ஜிப்மர் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்,” என்று செல்வம் வலியுறுத்தினார். மேலும், ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ். அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட விதிகளை தமிழகம் உள்பட பிற மாநில அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி, டெபுடேஷன் என்ற பெயரில் ஜிப்மர் சீட்டுகளைப் பெற்று, பின்னர் சொந்த மாநிலத்திற்கு திரும்புவதாக குற்றம்சாட்டினார்.

“இந்த செயல்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜிப்மர் நிர்வாகம் இதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று சபாநாயகர் செல்வம் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க  புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *