Saturday, November 15

“கோட்டகுப்பத்தில் பாமக கவுன்சிலர் மீது பொய்யான குற்றச்சாட்டு: அரசியல் பின்னணி?”

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் பாமக கவுன்சிலர் மக்கள் சிவா விடுதி கட்டி வருகிறார் அவரிடம் அப்பகுதியை சேர்த்த திமுக நிர்வாகிகள்
தட்சண மூர்த்தி, இளங்கோவன் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், பாமக கவுன்சிலர் நீரோடைய ஆக்கிரமித்து விடுதி கட்டி வருவதாக பொய் செய்தியை பரப்பி வருவதாக கவுன்சிலர் மக்கள் சிவா குற்றம் சாட்டியுள்ள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கோட்டகுப்பம் நகராட்சியில் தான் ஒருவர் மட்டுமே பாமக கவுன்சிலராக இருப்பதாகவும், எனவே தன் மீதான அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தன் மீதான ஆதரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  அ.இ.அ.தி.மு.க 53ஆவது ஆண்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *