Thursday, October 30

மாநில நிர்வாகிகள் கூட்டம்….



தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீதேவி நவசக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பவுண்டேஷனின் தேசிய செயலாளர் தலைமையில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலச் செயலாளர் குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சீத்தல் நாயக், மாநில இணைச்செயலாளர் கிருபா, மாநில அமைப்பாளர் ராஜ்குமார், மாநில அமைப்பாளர் பிரபு, மண்டல அமைப்பாளர் அன்பழகன், மண்டல அமைப்பாளர் மணி, தகவல் தொழில்நுட்ப மாநில அமைப்பாளர் தனவந்தன், மாநில செய்தி ஊடகப் பிரிவு அமைப்பாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் முக்கிய பேச்சாற்றி, பவுண்டேஷனின் எதிர்காலப் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும், மாநில நிர்வாகிகளின் பங்களிப்பையும் குறித்து விளக்கினார்.

 
இதையும் படிக்க  புதுவை அரசு விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *