Sunday, September 14

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!


மக்களவைத் தோ்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள இத்தொகுதிகளில் தோ்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில்,ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.
மக்களவைக்கான இறுதிக்கட்டத் தோ்தல் இன்று நிறைவடைந்ததும், மாலை 6.30 மணிக்குமேல் வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  மும்பையில் 14 பேர் உயிரிழிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *