Thursday, October 30

டெல்லியில் பலத்த பாதுகாப்பு….

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, டெல்லியில் 60,000 போலீசார்களும் ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் எல்லைப் பகுதிகளில் நகரக் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க  கடைசியாக தம்பிகளுக்கு ராக்கி கட்டி உயிரை விட்ட அக்கா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *