Sunday, April 27

வட மாநிலங்களில் புழுதிப் புயல்களை உருவாக்கும் கடுமையான வெப்ப அலை!

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததின்படி, வடமேற்கு மாநிலங்களில் ஏற்படும் வரலாறு காணாத அதிக வெப்பநிலை புழுதிப் புயல்களைத் தூண்டி, மழையின் தீவிரத்தைக் குறைக்கலாம். அடுத்த மூன்று நாட்களில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புழுதிப் புயல் வீசக்கூடும். மே 31 முதல் ஜூன் 3 வரை கிழக்கு ராஜஸ்தானிலும், மே 31 முதல் ஜூன் 1 வரை உத்தரப் பிரதேசத்திலும், ஜூன் 1, 2 அன்று மேற்கு ராஜஸ்தானிலும் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை புழுதிப் புயல்களின் உருவாக்கத்தை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க  பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *