Thursday, August 7

தமிழ்நாடு

புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா…

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாரதான் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 4 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் அந்தோணியார் சப்பர திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். மறுநாள் காலை, கரும்பு நேர்த்திகடன் செலுத்தப்படுவதுடன், விவசாயத்திற்கு செழிக்க பராம்பரிய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இந்த ஆண்டு, ஜனவரி 17 அன்று மாலை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்கிராம மக்கள் புனித வனத்து அந்தோணியார் ஆலய முன்பு கிராம ஒற்றுமையை போற்றும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில், சப்பரத்தில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பாத்திமா மாதா தனி தனி சப்பரங்களில் எழுந்தருளி திருவீதி உலாவினர்.மாலை நேரத்தில், பொறி உள்ளிட்ட பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டு வழிபாடு ...
தமிழக வரலாறு மற்றும் பண்பாடு அறியாமல் ஆளுநர் தவறு செய்கிறார்: பா.சிதம்பரம்…

தமிழக வரலாறு மற்றும் பண்பாடு அறியாமல் ஆளுநர் தவறு செய்கிறார்: பா.சிதம்பரம்…

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வளர் தமிழ் நூலகத்தில் 2025 ஆண்டுக்குள் 80,000 நூல்களை பதிந்திடும் நோக்கம் இருந்ததை முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். நூல்களை நன்கொடையாக வழங்குவதை வரவேற்கின்றேன் என்றும், இந்த நூலகத்தை தமிழக முதல்வர் திறந்து வைக்கப்போகின்றார் என்றும் கூறினார். திருவள்ளுவர் உடையை காவியாக மாற்றுவது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், தமிழக வரலாறு மற்றும் பண்பாட்டை அறியாமல் ஆளுநர் தொடர்ந்தும் தவறுகளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆளுநருடன் தமிழக அரசின் முரண்பாடு ஒன்றரை வாரத்தில் தீர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன விதிகளின் அடிப்படையில், ஆளுநர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்துப் போராடியவர் மற்றும் வெற்றியடைந்தவர் என...
எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

கோவை
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள வெள்ளலூர் பேருந்து திடலில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாமோதரன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனுடன், கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி இதில் பங்கேற்றனர். பிறகு, பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, அங்குள்ள காமராஜர் கல்யாண மண்டபத்தில் கண் மருத்துவ முகாம் மற்றும் ஈசிஜி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன, இதில் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் பெற்றனர்....
INTUC மாநில செயலாளர் செல்வம் பொங்கல் விழாவில் பொங்கல், கரும்பு வழங்கல்

INTUC மாநில செயலாளர் செல்வம் பொங்கல் விழாவில் பொங்கல், கரும்பு வழங்கல்

தமிழ்நாடு
கோவை மாவட்ட மனித உரிமை துறை சார்பில் INDUC செல்வம் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் தைப் பொங்கல் திருநாள் முன்னிட்டு பொங்கலை வரவேற்கும் வகையில் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார். இந்த நிகழ்வு கோவை  மாவட்டத் தலைவர் ஜே.ஜெரால்டு செயலாளர் வில்சன் தலைமையில்  நடைப்பெற்றது.இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் மற்றும்  மாநில செயலாளர் ஜான்சன்  சோபனா கவுன்சிலர், உடன் மாவட்ட செயலாளர் ஷானவாஸ், கோட்டைமேடு முத்து,அந்தோணி பிரிட்டோ,சசிகுமார், மணிகண்டன்,தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  ...
உழவர் சிலைக்கு மாட்டுப் பொங்கல் விழா…

உழவர் சிலைக்கு மாட்டுப் பொங்கல் விழா…

கோவை
கோவை:உக்கடம் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள போக்குவரத்து தீவுத்திடல் (ரவுண்டானா) பகுதியில் உழவு தொழிலையும், உழவர்களையும் போற்றும் விதமாக உழவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று, உழவுத் தொழிலுக்கு உதவியுள்ள கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, கோவையில் உள்ள உக்கடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட உழவர் சிலைக்கு 'ஆர் கோல்டு' நிறுவனரான ரங்கசாமி மற்றும் 'பிளாக் ஷிப் மீடியா' நிறுவனர் சதீஷ்குமார் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து, மாட்டுப் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.    ...
10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது…

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது…

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக தைப்பொங்கல் முதல் நாளில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா குளோபல் பாக்ஸ் எனும் தனியார் நிறுவனம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து 12 பலூன்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் வெப்ப காற்றால் நிரப்பப்பட்டு, பிரத்யேக பைலெட்டுகளுடன் வானில் எழிலான தென்னை மரங்களை மெல்லப் புறந்து பொள்ளாச்சியை சுற்றி வட்டமடிக்கின்றன. வெப்ப காற்று பலூன்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களில் மட்டுமே பார்க்கப்படும், ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பொள்ளாச...
மாவட்ட ஆட்சியர் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

மாவட்ட ஆட்சியர் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை
பொள்ளாச்சி அருகே ஆனைமலை நாகரூத் பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியினருடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், 84 குடும்பங்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், பழங்குடியினரின் நலத்துறை மூலம் அக்குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஆனைமலை வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  ...
உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பொங்கல் பண்டிகையையொட்டி ஒட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல், நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி, வெற்றியாளர்களை பாராட்டினார். இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி, 24 வட்டு செயலாளர் பிரேம்குமார் மற்றும் 24 வட்டு பிரதிநிதி சாமிநாதன் ஆகியோரும் உள்நுழைந்தனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுக...
குனியமுத்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

குனியமுத்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

கோவை
கோவை வடக்கு மாவட்டம் குனியமுத்தூர் பகுதி கழக திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா குனியமுத்தூர் பகுதி கழக வடக்கு மாவட்டத் தலைவர் லோகு தலைமையில் நடைபெற்றது. விழாவில், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அந்த முன்னிலையில், பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். விழாவில் துணை மேயர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு லோகு அவர்கள் பரிசுகளை வழங்கினார். இதில் பெரும்பாலான மக்களும் பங்கேற்றனர்.  ...
தமிழர் கலாச்சார அறக்கட்டளை சார்பில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம்

தமிழர் கலாச்சார அறக்கட்டளை சார்பில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம்

பொள்ளாச்சி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி-வடக்கிபாளையம் சாலையில் நாட்டு இன காளை மாடுகளுக்கான ரேக்ளா மாட்டு வண்டி போட்டிகள் சீராக நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாட்டு இன காளைகளுடன் பல போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டிகள் இரண்டு பல், நான்கு பல் என வயது அடிப்படையிலும், 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் நடந்தன. இதில், காங்கேயம் இன காளைகள், கர்நாடகா லம்பாடி காளைகள் உட்பட 1000 காளைகள் போட்டியிட்டன. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல்பரிசாக 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 30,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெறும் காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. அதிகாரிகள்...