Sunday, July 6

அரசியல்

ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்பு…<br><br><br>

ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்பு…


அரசியல்
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி எல்.கே.எஸ் மகாலில் இன்று நடந்தது .மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் வரவேற்றுப் பேசினார்.திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேசினர் முடிவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்பரையாற்றினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங...
அமைச்சர் மகேஷ் தொகுதியில் 6 மாதமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

அமைச்சர் மகேஷ் தொகுதியில் 6 மாதமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

அரசியல்
திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிகபட்டு 6 மாதம் காலமாகி விட்டது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் T.செந்தில் குமார் தலைமையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மனு கொடுக்கபட்டது இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளரும் அரசங்குடி சக்தி கேந்திர பொறுப்பாளர் சி. இந்திரன் மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திகேயன் பிரபாகரன் மூனிஸ் வரன் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடன் இருந்தனர்...
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

அரசியல்
இன்று நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பாத்திமா நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் உறையூர் மூர்த்தி ஏற்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக ஆர்.கே.ராஜா தலைமையில் உறையூர் சரன்ராஜ்,புத்தூர் நட்ராஜ்,காஜாமலை சுப்ரமணி, மணச்சநல்லூர் சுரேஷ்,தொட்டியம் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை உறையூர் v. மணிகண்டன், KR.லெனின்,K.தர்மராஜ்,கார்த்தி,விக்கி,S.ஞானசேகர்,S.மானிக்கம், U.மதன்குமார், J.நம்பிராஜ், விக்னேஷ், A.சதீஸ்,R.சதீஸ், முன்னின்று நடத்தினர்....
2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

அரசியல்
2-வது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். எடப்பாடி கே. பழனிசாமி பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ”சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மேலும், எம்எல்ஏ  ஒருவர் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆகையால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ குழு தான் விசாரிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை பேசுவதற்காக தான். நேற்று நான் ஹோமிசோபில் மருந்து பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கூறினேன். ஆனால், திமுக...
பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டிய நீதிபதி<br><br>

பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டிய நீதிபதி

அரசியல்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி நியாய் பிந்து, அமெரிக்க நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டி, "ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதை விட, 100 குற்றவாளிகள் தப்பிப்பது நல்லது" என்று கூறினார்.அமலாக்கத்துறையின் "விசாரணை ஒரு கலை" வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது....
கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

கட்சியை காப்பதே முக்கியம்: ஓபிஎஸ்

அரசியல்
அதிமுகவை கைப்பற்றிக் கொள்வதினும் காப்பாற்றுவதே முக்கியம் என்று முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது.இந்த நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் குறித்து ஓபிஎஸ் வெளியிட்டு அறிக்கையில் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொக...
அருணாசல் முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

அருணாசல் முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

அரசியல்
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு தொடா்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முக்டோவின் எம்.எல்.ஏ.வான காண்டுவுக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பெமா காண்டு இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்....
மேற்கு வங்கத்தில் 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு…

மேற்கு வங்கத்தில் 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு…

அரசியல்
மேற்கு வங்கத்தின் பராசத் மற்றும் மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. பராசத் தொகுதியின் வாக்குச்சாவடி தேகங்கா சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கடம்பகாச்சி சாரதார் பாரா எஃப்.பி பள்ளியிலும், மதுராபூர் தொகுதியின் வாக்குசாவடி காகதுவிப் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆதிர் மஹால் ஸ்ரீசைதன்யா பித்யாபீடத்திலும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்ததாக நேற்று (ஜூன். 2) அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1 அன்று நடைபெற்றது....
வாக்கு எண்ணும் இடங்களில் தடையில்லா மின்சாரம்….

வாக்கு எண்ணும் இடங்களில் தடையில்லா மின்சாரம்….

அரசியல்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருந்தது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக இருந்தனர். அவற்றில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். வாக்குப்பதிவு முடிந்து சுமார் 45 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளதால், தமிழகம் முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த 2 நாட்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவசரகால செயல்பாடுகளை கையாள ஆபரேட்டர்கள் விழிப்புடன் இரு...
இந்த தேர்தல் ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையானது: யோகி ஆதித்யநாத்!

இந்த தேர்தல் ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையானது: யோகி ஆதித்யநாத்!

அரசியல்
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ராமரைப் பின்பற்றுபவர்களால் டெல்லி ஆளப்படும். “லோக்சபா தேர்தல் என்பது ராமரைப் பின்பற்றுபவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல். ராமர் பக்தர் என்பதால் வீர் பகதூர் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது." ராமர் கோவில் கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கூறியது. ராமர் கோவில் சரியாக கட்டப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சியும் கூறுகிறது. எனவே, இந்தத் தேர்தல் கடவுளைப் பின்பற்றுபவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல்....