Saturday, July 5

அரசியல்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல்

அரசியல்
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: * ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. * வாகன உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. * எரிசக்தி துறையின் மூலமாக 3 முக்கிய கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. * நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் திட்டம், மற்றும் காற்றாலை திட்டத்தைப் புதுப்பிக்க ஒ...
மத்திய பிரதேச கல்லூரி பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் புத்தகங்கள்…

மத்திய பிரதேச கல்லூரி பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் புத்தகங்கள்…

அரசியல்
2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்திய பாரம்பரிய அறிவை மாணவர்கள் அறிய செய்யும் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதைச் செய்தியாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்களை கல்லூரிகள் தாமதமின்றி வாங்கி, அவற்றை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதியவை அடங்கும். இவர்கள் அனைவரும் வித்யா பாரதியில் பங்களிப்புச் செய்தவர்களாகும். மேலும், மாணவர்களுக்கு இந்த புத்தகங்களைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக, அனைத்து கல்லூரிகளிலும் "பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா" எனும் செல...
மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்…

மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்…

அரசியல்
பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கருக்கு மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு நகலை வழங்கினர். சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக கடந்த மே 4 ஆம் தேதி தேனியில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குண்டர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ததன் பேரில், ஆகஸ்ட் 9ஆம் தேதி நீதிமன்றம், ச...
77 வது சுதந்திர நாள் விழாவையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு

77 வது சுதந்திர நாள் விழாவையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு

அரசியல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் 9,000 போலீசார்களின் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 15.08.2024 அன்று நடைபெறும் 77வது இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழா ஒவ்வொரு ஆண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும். அந்த விழா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்குகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் N. கண்ணன் (தெற்கு), R. சுதாகர் (போக்குவரத்து), K.S. நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாள...
பொன். மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை!

பொன். மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை!

அரசியல்
சிபிஐ அதிகாரிகள் முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அவர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக, இதே பிரிவில் பணியாற்றி பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் 2018-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, 2023-ல் சிபிஐ-யால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன். மாணிக்கவேலின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கின் தொடர்பாக பொன். மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன். மாணிக்கவேல் 1989-ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற...
“தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு புதிய சட்டம் உருவாக்கப்படாது: மத்திய அரசு”

“தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு புதிய சட்டம் உருவாக்கப்படாது: மத்திய அரசு”

அரசியல்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தோ்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டதுக்குப் பிறகு, புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை, 2023 பிப்ரவரியில், அரசமைப்புக்கு மாறாக இருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்குப் பிறகு, இந்த திட்டத்திற்கு மாற்றாக ஏதேனும் புதிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளதாக மக்களவையில் கேள்வி எழுத்தப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதெல்லாம், மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆர்ஜூன் ராம் மேக்வால், "தோ்தல் நன்கொடை பத்திரங்களைப் பற்றிய புதிய சட்டங்களை உருவாக்கும் எண்ணம் இல்லை" எனக் கூறினார். தோ்தல் நிதிப் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அந்தப் பத்திரங்களின் மூலம் எவ்வளவு நன்கொடை பெற்ற கட்சிகள் என்பவற்றை, தோ்தல் நிதிப் பத்திரங்களை வழங்கிய...
த.வெ.க. கட்சிக்காக 3 கொடிகள்…

த.வெ.க. கட்சிக்காக 3 கொடிகள்…

அரசியல்
நடிகர் விஜய் உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சிக்காக மூன்று கொடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று கொடிகளிலிருந்து எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இறுதி முடிவை விஜய் எடுத்துக் கொள்ளவுள்ளார். த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் மற்றும்0 தேதி குறித்து செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும், அதற்கு பிறகு கட்சியின் கொடி மற்றும் மாநாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

அரசியல்
பிரபல யூடியூபா் சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து அவரது தாயாா் கமலா, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்கு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஐய்யப்பராஜ், ‘சவுக்கு சங்கரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக் ஆஜராகி, அவதூறாகப் பேசி வரும் சவுக்கு சங்கரை எச்சரிக்கை செய்யும் விதமாகவும், அவா் திருந்த வேண்டும் என்பதற்காகவும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அதற்காக அவரை எத்தனை நாள்கள் சிறையில் அடைத்து வைத...
பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாடா?

பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாடா?

அரசியல்
திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதற்கு அனுமதி கோரி, ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனுவில் குறிப்பிட்ட தேதியில்லாததால், ரயில்வே துறை சார்பில் அந்த மாநாட்டிற்கான சரியான தேதியை குறிப்பிடும்படி கட்சியை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மைதானத்தின் பரப்பளவு மிகச்சிறியது என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும், அதனால் இங்கு மாநாடு நடத்த வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின், பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்தும் இடங்களை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பார்வையிட்டிருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் கட்சி தலைமையிலிருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட...
ஒன்றிய அரசு கண்டித்து திமுக ஆர்பாட்டம்…

ஒன்றிய அரசு கண்டித்து திமுக ஆர்பாட்டம்…

அரசியல்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திருச்சியில் மாபொரும் கண்டன ஆர்பாட்டம்5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதயும், தமிழகத்திற்கு எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்பட்டுள்ளதோடு ஒன்றி...