தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சுமார் 114 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளையொட்டி, நாளை ஜூன் 22ஆம் தேதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தன.
கள்ளச்சாராயம் சம்பவத்தினால், நாளை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தவெக தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு, தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.