Thursday, July 17

ஒரு நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை…

தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இன்று கடைசி நாள் பிரசாரம் என்பதாலும், நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருப்பதால் மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நேற்று குவிந்த மது பிரியர்கள் தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்தனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க  ரயில்வே போராட்டத்தில் உயிர்நீத்த 17 ஊழியர்களுக்கு செவ்வணக்கம்: பழைய ஓய்வூதியம் மீட்பு கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *