தமிழக மீனவர்கள் கைது!

111207023 - தமிழக மீனவர்கள் கைது!<br>

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். அத்துடன் மீனவர்களின்  விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடம் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை கடற்படை மீனவர்கள் படகை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது, மீனவர்களின் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், படகு வேகமாக மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க  சூலூரில் கார் விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து: 15-க்கும் மேற்பட்ட கார்கள் நாசம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *